வலைப்பதிவுகளின் திரை விமர்சனம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : June 19, 2013, 8:18 pm
சூடான சினிமா இடுகைகள்




Man Of Steel
Cable சங்கர்







சமீபத்தில் எழுதப்பட்ட திரை விமர்சனம்



புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ? இழந்து விட்டோம் தமிழின வீரம் ...மேலும் வாசிக்க

புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ?




இழந்து விட்டோம் தமிழின வீரம் ஒன்றை
இழந்து தவிக்கிறோம்
ஈழ உணர்வாளன் எங்கள் ஐயா
இனமான இயக்குனர் திலகம்
உங்களை இழந்துவிட்டோம்
நியமற்று போகுமோ
உங்கள் இழப்பு
விடுதலையின் சிகரமே
ஈழத்தின் குரலே
புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ?
தமிழனின் அடையாளமே
நாம் தமிழரின் ஆணிவேரே
உன்னை இழந்து தவிக்கிறோம்
புலிக்கொடி போர்த்து உன் வித்துடலை அனுப்புவோம்
விடுதலையை உன் ஆத்மாக்கு பரிசாக வைப்போம்

சரவணை மைந்தன்
http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மிர்ச்சி சிவாவும் சந்தானமும் இணைந்து நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் யா யா. இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார் முருகராஜ். இவர் நிறைய படங்களில் புரடக்க்ஷன் மேனேஜராக ...மேலும் வாசிக்க

மிர்ச்சி சிவாவும் சந்தானமும் இணைந்து நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் யா யா. இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார் முருகராஜ். இவர் நிறைய படங்களில் புரடக்க்ஷன் மேனேஜராக பணியாற்றியவர். அந்த அனுபவத்தில் யா யா படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். பிரபலங்கள் ஒவ்வொருவரும் படத்தைப் பற்றியும் படத்தில் நடித்தவர்களைப் பற்றியும் நாலு வார்த்தை நல்ல விதமாக பேசிக் கொண்டார்கள். விஜய் அப்பா எஸ்.எ. சந்திரசேகர் பேச வேண்டிய முறை வந்தது. வந்தவர் மைக்கைப் பிடித்தார்.
Ya-Ya-New-Movie-Stills-16
“சமீபத்தில ஒரு படம் பார்த்தேன். அந்தப் படத்தில என்ன இருக்குங்கிறதே எனக்கு இன்னமும் புடிபடலை… ஆனா அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கிறது. இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஏன் ஓடுதுன்னே தெரியலை… ஆனாலும் சூப்பர் ஹிட்டாகி ஓடுகிறது. எங்க காலத்தில் நாங்க இயக்கும் போது இருந்ததைக் காட்டிலும் இப்போது சினிமா வேறு ஒரு பாதையில் பயணிக்கிறது. எந்த பாதையில் பயணித்தாலும் பணத்தைப் போட்டு படம் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைத்தால் சரிதான்…” என்றாரே பார்க்கலாம்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
MGR (1939 - 1978) தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டம். ஸ்டார் வல்யு, நட்சத்திர நடிகர்கள், ரசிகர்கள் தொடர்ச்சி, அதிக சம்பளம், முதல் நாள் வசூல் பற்றி எல்லாம் அதிகம் ...மேலும் வாசிக்க
MGR (1939 - 1978) தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டம். ஸ்டார் வல்யு, நட்சத்திர நடிகர்கள், ரசிகர்கள் தொடர்ச்சி, அதிக சம்பளம், முதல் நாள் வசூல் பற்றி எல்லாம் அதிகம் பரவா காலம். 1936 ஆம் ஆண்டு "சதி லீலா"வதியில் அறிமுகம். 11 வருடம் கழித்து பாட தெரிந்தவர்கள் தான் நாயகர்கள் என்ற கிளிசேக்களை உடைத்து எறிந்து "ராஜ குமாரியில்" அறிமுகம். தொடர்ச்சியாக வருசத்துக்கு ஒன்று, ரெண்டு என பிளாக் பூஸ்டர்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


...மேலும் வாசிக்க


( ஒரு போட்டியினால் தீண்டாமையை மாற்றிவிட முடியுமா?)இது கற்பனைத் தான் என்றாலும் என் மனதுக்குள் நிகழ்த்தி அதை நிஜத்தில் நீங்களும் பார்க்குமாறு வடிவம் கொடுக்கும் அளவு இந்த முயற்சி வந்திருக்கிறது. இதைத் தான் சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக நான் பார்க்கிறேன். போர்க்காய் என்ற ஒரு விளையாட்டை வைத்து தீண்டாமை என்ற ஒரு சமூக மடமையை ஒரு குறும்படத்திலாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த ரணகளம் மூலம் எங்கள் குழுவிற்கு நிறைவேறியது. இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த என் நண்பர் நிவாஸ்குமாருக்கும், விக்னேஷ், குழு நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் சந்திரசேகர்,மற்றும் எங்களை மேலும் ஊக்குவித்த தினத்தந்தி, டெக்கன் கிரானிக்கல் நாளிதழிற்கும் இந்தப் பதிவின் மூலம் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் 

இந்தக் குறும்படத்தை என் பதிவுலக நண்பர்கள், மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் கண்டு கருத்துரையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 ரணகளம் : தீண்டாமையை வேரறுக்கும் முயற்சி



நட்புடன் 
தமிழ்ராஜா

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


'இது உங்கப்பா செத்துப்போய்ட்டாருன்னு உங்கம்மா கொடுத்த தந்தி! இது உங்கப்பா செத்துப்போய்ட்டாருன்னு உங்கப்பா கொடுத்த தந்தி! குடும்பமே குளோஸ்' ...மேலும் வாசிக்க
'இது உங்கப்பா செத்துப்போய்ட்டாருன்னு உங்கம்மா கொடுத்த தந்தி!
இது உங்கப்பா செத்துப்போய்ட்டாருன்னு உங்கப்பா கொடுத்த தந்தி!
குடும்பமே குளோஸ்'

என அன்பேவா படத்தில் மனோரமாவை கலவரப்படுத்துவார் நாகேஸ்.

இத்தனை ஆண்டுகாலமாக, நமது துக்கத்தையும், மகிழ்ச்சியையும் நம் உறவுகளுக்கு கொண்டு சேர்ந்த 'தந்தி' நம்மிடமிருந்து ஜூலை 15 விடைபெற இருப்பதாக பி.எஸ்.என்.எல் இந்த மாதம் அறிவித்திருக்கிறது.

இப்பொழுது மின்னஞ்சலும், செல்பேசியும் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கிவிட்டன. இதெல்லாம் இல்லாத காலத்தில், தந்தி தான் எல்லா தகவல்களையும் கொண்டு சேர்த்து நமக்கு உதவியது.

சொல்லத்தக்க சுவாரசியமான என்னுடைய தந்தி அனுபவம் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்களுடன் இரவு படத்திற்கு போகும்பொழுது,  தோழியின் பிறந்தநாள் அடுத்த நாள் என‌ நினைவுக்கு வந்தது. வாழ்த்து அட்டை அனுப்புவதற்கு நாள்கள் இல்லாததால், போகிற போக்கில் ஒரு வாழ்த்து தந்தி அனுப்பிவிட்டு படத்திற்கு போய்விட்டேன்.

சில நாள்களுக்கு பிறகு, இன்னொரு தோழியை சந்தித்த பொழுது, "நீ அனுப்பிய தந்தி எவ்வளவு கலவரப்படுத்திவிட்டது தெரியுமா!  அந்த பகுதிக்கு தந்தி என வந்தால், யாராவது இறந்த செய்தி தான் வரும். உன் தந்தியை கேள்விப்பட்டதும், ஒரு அழுகை. பிறகு, 'வாழ்த்து செய்தி' என தெரிந்ததும், வாழ்த்து செய்தியை யாராவது தந்தி அனுப்புவார்களா! என அன்றைக்கு முழுவதும், அந்த பெண்ணுக்கு பிறந்தநாளில் ஒரே அர்ச்சனை! அனுப்பிய உனக்கும் அர்ச்சனை!" என்றார்.

இன்றைய தலைமுறைக்கு தந்தி குறித்த செய்திகள் ஆச்சரியமாக தான் இருக்கும். அன்றைக்கு இரவு, பகல், தூரம் பாராது அவசர செய்திகளை பல சிரமங்களை மேற்கொண்டு சேர்த்த தந்தி ஊழியர்களை இந்த நாளில் நாம் நன்றியுடன் நினைவுகூறவேண்டும்.

இந்தியாவில் இன்றைக்கும் கூட செல்பேசிகளும், இணையமும் நமது குக்கிராமங்களையும், பழங்குடி மழைவாழ் கிராமங்களையும் சேர்ந்திருக்க வாய்ப்பேயில்லை. தொலை தொடர்புகளில் கவனம் செலுத்துகிற தனியார் நிறுவனங்கள் நிறைய‌ கல்லா கட்டும் பெருநகரங்களிலும், நகரங்களிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

இன்றைய அரசுக்கு 'சேவை' என்ற வார்த்தை பிடிக்காததாகி, 'லாப‍‍நட்ட கணக்கு' பார்க்கும் அரசாக மாறிவிட்டது. அதனால், அந்த மக்களுக்காக தந்தி சேவையை பாதுகாக்கவேண்டும். நம் அனைவரும் ஒரு தந்தி கொடுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு சினிமா, முடக்கப்பட்ட கதையைச் சொல்லும் ”செல்லுலாய்ட் டிரீம்ஸ்” ...மேலும் வாசிக்க
இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு சினிமா, முடக்கப்பட்ட கதையைச் சொல்லும் ”செல்லுலாய்ட் டிரீம்ஸ்” திரைப்பட அறிமுகத்தை மாற்று-வில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். தமிழில் அந்தப்படம், ஜே.சி.டேனியல் என்ற பெயரில் வருகிறது.

இந்தப் படத்தில் வெளியாகவுள்ள பாடலை அறிமுகம் செய்த எனது பதிவு மாற்றுவில் வெளியாகியுள்ளது - இசையைப் பார்க்க முடிந்தவர் ’வைக்கம் விஜயலட்சுமி’ 

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
(குறிப்பு-வணக்கம் நண்பர்களே!தில்லு முல்லு படத்துக்கு இது ஒரு தில்லு முல்லுப் பதிவு.அப்படியே தில்லு-வைப் படியுங்கள் அப்புறம் படங்களின் மீது உங்கள் கணணி எலியை(MOUSE) மேய விட்டு..முல்லு-வைப் படியுங்கள்  ...மேலும் வாசிக்க
(குறிப்பு-வணக்கம் நண்பர்களே!தில்லு முல்லு படத்துக்கு இது ஒரு தில்லு முல்லுப் பதிவு.அப்படியே தில்லு-வைப் படியுங்கள் அப்புறம் படங்களின் மீது உங்கள் கணணி எலியை(MOUSE) மேய விட்டு..முல்லு-வைப் படியுங்கள்  நன்றி)    தில்லு முல்லு என்று பெயர் வைப்பதைவிட  லொல்லு லொல்லு  என்று பெயர் வைத்திருக்கலாம் என்ன கொடுமையடா இது?  ஒரிஜினல் தில்லு முல்லு  பார்த்ததோடு நின்றிருக்கலாம்  விதி யாரை

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
MGR (1939 - 1978) தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டம். ஸ்டார் வல்யு, நட்சத்திர நடிகர்கள், ரசிகர்கள் தொடர்ச்சி, அதிக சம்பளம், முதல் நாள் வசூல் பற்றி எல்லாம் அதிகம் ...மேலும் வாசிக்க
MGR (1939 - 1978) தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டம். ஸ்டார் வல்யு, நட்சத்திர நடிகர்கள், ரசிகர்கள் தொடர்ச்சி, அதிக சம்பளம், முதல் நாள் வசூல் பற்றி எல்லாம் அதிகம் பரவா காலம். 1936 ஆம் ஆண்டு "சதி லீலா"வதியில் அறிமுகம். 11 வருடம் கழித்து பாட தெரிந்தவர்கள் தான் நாயகர்கள் என்ற கிளிசேக்களை உடைத்து எறிந்து "ராஜ குமாரியில்" அறிமுகம். தொடர்ச்சியாக வருசத்துக்கு ஒன்று, ரெண்டு என பிளாக் பூஸ்டர்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


      தமிழ் ஸ்டுடியோவும் , பெரியார் ஊடகத்துறையும்  இணைந்து பெரியார் திடலில் நல்ல படங்களை ...மேலும் வாசிக்க

     
தமிழ் ஸ்டுடியோவும் , பெரியார் ஊடகத்துறையும்  இணைந்து பெரியார் திடலில் நல்ல படங்களை திரையிட்டு வந்தனர். இந்த தொடரின் நிறைவு திரைப்படமாக கனசெம்பா குதிரயேனேறி என்ற கன்னடப் படம் திரையிடப்பட்டது.

  காதல்தான் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை என்பது போல எடுக்கப்படும் தமிழ் படங்களும் ( காதலும் பிரச்சினைதான் என்பது வேறு விஷ்யம் ) , உலகை காக்கும் அமெரிக்கர்கள் என்பது போல எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களும் போரடித்து விட்டதால் , வேற்று மொழி அயல்னாட்டு படங்களை மட்டுமே தற்போது பார்த்து வருகிறேன்.

கன்னட படங்கள் மீது ஆர்வம் உண்டு என்றாலும்  சென்னையில் பார்க்கும் வாய்ப்பு குறைவு. எனவே இந்த திரையிடல் அறிவிப்பு வந்ததும் ஆர்வமாக காத்திருக்கலானேன்.

மாலை 5.30க்கு படம் என்றால் 5 மணிக்கே சென்று விட்டேன். அப்போது யாரும் வந்திருக்கவில்லை. பெரியார் திடலை சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன்.

 கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் வர ஆரம்பித்தனர். வந்தவர்கள் அனைவரும் சினிமா ரசனை மிகுந்தவர்கள் என்பதால் , படம் முடிந்ததும் நிறைவு நாள் நிகழ்ச்சி கலக்கலாக இருக்கும் என நினைத்து கொண்டேன்.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஆர்கனைசர்களுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் போல இருந்தது.
திரைப்படங்களில் சப் டைட்டில் போடுவது சினிமா அனுபவத்தை பாதிக்கிறது என்ப்து என் எண்ணம். சினிமா என்பது வசனம் மட்டும் அன்று. நடிப்பு , கேமிரா, இசை என்றெல்லாம் இருக்கிறது.

ஒரு அட்டகாசமான காட்சியையோ , முக பாவத்தையோ கவனிக்காமல் , சப் டைட்டிலை எழுத்து கூட்டி படித்து கொண்டிருப்பது எனக்கு சரி என தோன்றுவதில்லை. சினிமா பார்க்கும் அனுபவத்தை இழந்து நாவல் பார்க்கும் அனுபவமே கிடைக்கும்.

வீட்டில் இப்படி பார்ப்பது வேறு விஷ்யம். சப்டைட்டிலுடன் ஒரு முறை , சப் டைட்டில் இல்லாமல் ஒரு முறை என பார்க்கலாம். அல்லது சில காட்சிகளை தேர்ந்தெடுத்து சப் டைட்டில் இல்லாமல் பார்க்கலாம். ஆனால் இது போன்ற திரையிடல்களில் சப் டைட்டில் இல்லாமல் போடுவதே உசிதம்.

எனவே படம் சப் டைட்டில் இல்லாமல் ஓட தொடங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே கர்னாடக கிராமம் ஒன்றுக்கு அனைவரும் சென்று விட்டது போன்ற ஓர் உணர்வு.

இறப்பு ஏற்படுவதை தன் கனவு மூலம் முன் கூட்டியே அறியும் சக்தி கொண்ட ஓர் ஏழை வெட்டியான். மற்றும் அவன் மனைவி.

இவர்களைப்பற்றிய கதை..

இந்த எளிய மக்களைப்பற்றி வெகு சில கதாபாத்திரங்களை வைத்து , கிராமத்தில் நடக்கும் கதைதான். ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

குறிப்பிட்ட கனவு வந்தால் இறப்பு நிகழும் என்பது ஐதீகம். அது போன்ற ஒரு கனவு அவனுக்கு வருகிறது.

அந்த ஊரில் பணக்கார முதியவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவரைப்பார்க்க அவர் மகன் ,மரு மகள் ,பேத்தி வருகின்றனர்.  அவர் மருமகளுக்கோ , பேத்திக்கோ அவர் அருகே செல்வதே பிடிக்கவில்லை. உண்மையில் அவர்கள் அவரைப்பார்க்க வரவில்லை. சொத்து விஷ்யமாக வந்து இருக்கிறார்கள்.


இந்த நிலையில்தான் அவனுக்கு கனவு வருகிறது. அந்த கிழ்வன் இறந்ததுதான் கனவாக வந்ததாக நினைத்து அவன் வீடு தேடி வருகிறான், இறுதி சடங்குக்ளைப் பற்றி பேச வரும் அவனை அவர்கள் விரோதமாக பார்க்கிறார்கள்.. யாரும் சாகவில்லை. இறுதி நிகழ்ச்சியெல்லாம் வேண்டாம் என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.

என்ன சுவாரஸ்யம் என்றால் , உண்மையில் அந்த கிழவர் இறந்து விட்டார், காலம் காலமாக இருந்து வரும் கனவு ஐதீகம் இப்போதும் பலித்து விட்டது, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இறப்பை மறைக்கிறார்கள். என்ன பெரிய காரணம்.. சொத்து விவகாரம்தான்,  காசுக்காக பெற்ற அப்பன் உடல் அழுகி நாற்றம் எடுத்தாலும் பரவாயில்லை என நினைக்கும் மகன்.

அந்த அப்பாவி ஏழையின் எளிய நம்பிக்கை... நாகரீகம் பொருந்திய அறிவாளிகளின் தந்திரம் என்ற இரு துருவங்களுக்கு இடையேயான மாபெரும் இடைவெளி நம் கண் முன் விரிகிறது.


அவனது நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருக்கலாம், அந்த மூட நம்பிக்கை அவனை ஏழ்மையில் உழலச்செய்யலாம். இதெல்லாம் தவறுதான், ஆனால் இதற்கு தீர்வு , இந்த நம்பிக்கையை சிதைப்பதுதானா... ஒருவர் தவறை எதிர்க்கிறார் என்றால் அவர் நல்லவர் என்று சொல்ல முடியாது , அவர் அதை விட பெரிய தவறின் பிரதினிதியாக இருக்க கூடும்.

சரி..இவர்கள் அப்படி தந்திரமாக நடந்து கொள்கிறார்களே..அவர்களை பார்த்து வளரும் குழந்தை எப்படி வளரும்?

ஒரு ஹைக்கூ படித்து இருப்பீர்கள்//

ஓர் எறும்பை கொன்றேன்..
என் மூன்று குழந்தைகள்
பார்ப்பதை உணர்ந்தேன் 


அவன் ஏழை..கிழிந்த ஆடை. ஆடை முழுக்க ஓட்டைகள். எந்த ஓட்டையில் தலையை விடுவது , எதில் கால் விடுவது என்பது தெரியாத அளவுக்கு ஓட்டை. ஆனால் அவனை அந்த வறுமை கண்ணீர் விட வைக்கவில்லை. தன் கனவு பொய்யாக போய் விட்டதே என்பதுதான் அவனை வருந்த வைக்கிறது,

ஆனால் இன்னொரு குடும்பம் .இன்னொரு வாழ்க்கை..புத்திசாலிகள் .அசட்டு நம்பிக்கைகள் ஏதும் இல்லாதவர்கள்/ ஆனால் ஒருவர் மீது ஒருவர் அன்பு இல்லாதவர்கள். அந்த குழந்தையும் யார் மீதும் அக்கறையோ அன்போ இல்லாமல்தான் வளரப்போகிறது என்பது பூடகமாக சொல்லப்பட்டு விடுகிறது

இதை சொல்லிய விதம் அற்புதம். அலுப்பூட்டாத திரைக்கதை. ஒவ்வொருவர் கோணத்தில் கதை சொல்லும் பாங்கு அருமை...அசட்டு நகைச்சுவைகளும், எதிர்பார திருப்பங்களும்தான் படத்தை விறு விறுப்பாக்கும் என நினைக்கும் தமிழ் இயக்குனர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.

அந்த பணக்கார வீடு, ஏழை குடிசை, ஒப்பனை இல்லா கிராமம் என கண் முன் நிறுத்தும் கேமரா , இசை என அனைத்திலும் சிறப்பாக அமைந்து இருக்கும் இந்த படத்தை அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.




   

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


படம் எடுக்கும் ஆர்வத்தில் வந்த பல என்.ஆர்.ஐ. தயாரிப்பாளர்களை அவர்கள் கொண்டு வந்த பணத்தை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்ட தமிழ் சினிமா, தம்பி அடுத்தது ...மேலும் வாசிக்க

படம் எடுக்கும் ஆர்வத்தில் வந்த பல என்.ஆர்.ஐ. தயாரிப்பாளர்களை அவர்கள் கொண்டு வந்த பணத்தை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்ட தமிழ் சினிமா, தம்பி அடுத்தது யாரு…? என்ற கேள்வியையும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த கேள்விக்கு அவ்வப்போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலியாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள். படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையோடு ஸ்விஸ்லிருந்து கிளம்பி கோடம்பாக்கம் வந்திறங்கிய ரவிந்தர் சந்திரசேகரைப் பார்த்ததும், ‘தம்பி… இந்த ஏரியாவுக்கு நீ புதுசா… உன்னை மாதிரி நிறைய பேரு வந்திட்டு காலியாகி போயிட்டாங்க… இப்போ நீ வந்திருக்கே…’ என்றே நக்கலாக பேசியிருக்கிறார்கள் பலரும். ஆனாலும் தான் நிச்சயமாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் களம் இறங்கிய ரவீந்தர் லிப்ரா ப்ரடக்க்ஷ்ன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி படம் எடுக்க ஆரம்பித்தார். லோ பட்ஜெட் படம்னு கேள்விப் பட்டிருப்பீங்க. ஆனா, இவரோ ஒரு லோ பட்ஜெட் படம் எடுக்கிற பணத்திலேயே நாலு லோ பட்ஜெட் படத்தை எடுத்துவிட்டார். விளைவு, சுமார் ஆறுக்கும் மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

producer-ravindhar

இவரது தயாரிப்பான நளனும் நந்தினியும், சுட்ட கதை ஆகிய படங்களைப் பார்த்த, வேந்தர் மூவிசுக்கு மீடியேட்டர் வேலை பார்த்து வரும் அம்மா கிரியேசன்ஸ் சிவா இந்த இரண்டு படங்களையும் நைசாக வேந்தர் மூவிசுக்கு கை மாற்றிவிட்டுவிட்டார். இதனால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் எதிர் நோக்கும் ரிலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் கடந்துவிட்டார் ரவீந்தர். இந்த படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஏற்கனவே ஜெனிவாவில் நடத்தினார்கள். சென்னையிலும் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தி முடித்த கையோடு தனது பேஸ்புக்கில் ‘நண்பா, NRI தயாரிப்பாளர்கள் எல்லாம் ATM மடையனுங்க கிடையாது’ என்று எழுதியிருக்கிறார் ரவீந்தர். வேந்தர் மூவீஸ் தலையில ரெண்டு படங்களையும்தான் கட்டியாச்சே… அப்புறம் என்ன… இதுவும் எழுதலாம்… இன்னமும் எழுதலாம் சாரே…!


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஹாலிவுட் சூழலில் படம் எடுத்து தமிழில் கலக்குபவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய இந்தியன் படத்திற்கு பிறகு ...மேலும் வாசிக்க


ஹாலிவுட் சூழலில் படம் எடுத்து தமிழில் கலக்குபவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய இந்தியன் படத்திற்கு பிறகு நான் எந்த பட்த்தையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்லை. ஏன்?

 காரணத்தை நான் இங்கு விளக்கியாக வேண்டும். தியேட்டர் கார்ர்கள் முன்பு போல் இருப்பதில்லை. முன்பெல்லாம் முன்வரிசையில் இருப்பவருக்கு டிக்கெட் கிழிக்கும் போதே அவருக்கு தெரியாமல் சந்தில் புகுந்து ஓடிவிடுவேன். ஆனால் இப்பொழுது அனைத்து டிக்கெட்டுகளையும் செக் செய்தே அனுப்புகின்றனர். போன வருடம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படம் பார்க்க நைசாக தியேட்டருக்குள் நுழைகயில் இரண்டு ஜிம் பாய்ஸ் அலேக்காக தூக்கி வெளியில் போட்டு விட்டனர். "த்தா... இத்தனை பேரு டிக்கெட் எடுத்துருக்கானுகள்ள... ஒருத்தன மட்டும் டிக்கெட் இல்லாம விடமாட்டியா" ன்னு நாக்கை பிடிங்கிக் கொள்ளும்படி ஒரு கேள்விதான் கேட்டேன். எங்கிருந்தோ வந்த அந்த கரளாக்கட்டை கை என் மூக்கை பதம் பார்க்க குபுக் என்று ரத்தம் பீரிட்டு வந்தது. சரி இது வேலைக்கு ஆகாது என்று எண்ணி அன்றுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட்டுவிட்டேன்.

பிறகெதற்கு இந்தப் படத்தை பார்த்தேன்?  பொதுவாக என் அலைவரிசையில் இருக்கும் நண்பர்கள் சொல்லும் படங்களைத்தான் நான் தியேட்டரில் பார்ப்பேன். சென்ற வாரம் கூட “மாயக்கோட்டை வேட்டைக்காரி” என்ற ஒரு படத்தை பார்க்கச் சொன்னார்கள்.. படம் கும்ம்ம் என்று இருந்த்து. சென்றவாரம் எனக்கு வந்த ஒரு வாசகர் கடித்தில் தில்லு முல்லுவில் பிட்டுகள் அதிகம் இருப்பதாகவும், தீயா வேலை செய்யனும் குமாரில் அந்த அளவுக்கு எதுவும் இல்லை என்றும் எழுதியிருந்தார். அந்த வாசகர் கடிதமே எனக்கு இந்த பட்த்தை பார்க்க தூண்டுதலாக இருந்தது. உடனே வாயை பிளந்து கொண்டு தில்லு முல்லுவிற்கு போனேன். த்தா... புதுசா பிட்டு பார்ப்பவனை நம்பக்கூடாது என்று அப்போது தான் புரிந்து கொண்டேன். நேற்று உலக பிட்டு பாஸ்கர் தன் தளத்தில் படத்தில் எதிர்பார்த்த தெல்லாம் இருக்கின்றது என்று எழுதியிருந்தார்.

 உடனே அதயே ஆயுதமாக உபயோகித்து “அப்போ உங்க செலவிலேயே என்னை படத்துக்கு அழைச்சிட்டு  போங்க” என்று ஒரு ட்வீட்டரில் ஒரு MMS அனுப்பினேன். அதற்கு பலனும் இருந்தது. அசிங்கமாக என்னை திட்டினாலும், அவரே கைக்காசை போட்டு என்னை படத்திற்கு அழைத்து சென்றார். நல்ல வேளை சுந்தர்.சி ஏமாற்றவில்லை. ஹன்சிகாவை நிறைய ஆங்கிளில் விதவிதமாக எடுத்திருந்தார். இந்த படத்தில் என்னுடைய “பரசுராம் வயது 55” படத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்த்து. இது சுந்தர்.சி என்னிடன் அசிஸ்டண்டாக அந்த படத்தில் பணியாற்றியதால் ஏற்பட்ட பாதிப்பாக கூட இருக்கலாம். ஆனால் பரசுராமை காட்டிலும் வசன்ங்களிலும் கேமரா ஆங்கிள்களிலும் நிறைய வித்யாசம் காட்டியிருந்தனர்.

(கீழ்கண்ட கேள்விகளுக்கு இரண்டு பத்திகளுக்கு மிகாமல் விடையளிக்கவும். ஒவ்வொரு பதிலுக்கும் 5 மதிப்பெண்கள்)

தீயா வேலை செய்யனும் குமாரு பட்த்தின் ஒண் லைன் என்ன? 





புகைப்பழக்கம் கேன்சரை
விளைவிக்கும்
குடிப்பழக்கம் உயிரைக்
கொல்லும்.....

என்று நான் எழுதிய முதல் கவிதையை சொன்னேன். ஆனால் படத்தின் வந்த ஒண் லைன் இதுதான்.

தீயா வேலைசெய்யனும் குமாரு பட்த்தின் கதை என்ன?


முகேஷ் என்ற வாலிபரின் வாழ்க்கையில் குட்கா சாப்பிட்டதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை கண்ணீருடன் கூறும் படமே இந்த தீயா வேலை செய்யனும் குமாரு.

“என் பேரு முகேஷ்... நா ஒரு வருஷமா குட்கா சாப்புடுறேன்... அதனால எனக்கு வாய் கேன்சர் வந்துருச்சி... இதனால எனக்கு பேச்சு வராம கூட போகலாம்” என்று வசன்ங்களை உணர்ச்சி பூர்வமாக பேசுகையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. சித்தார்த் செமையாக கெட்டப்பை மாற்றியிருக்கிறார். கடைசியில் ஆப்ரேசன் செய்யப்பட்ட முகேஷ் பிழைக்கிறாரா இல்லையா ? என்பது தான் மீதி கதை. அஸ்கு புஸ்கு அத நா சொல்ல மாட்டேன் நீங்களே பட்த்த பாத்து தெரிஞ்சிக்கோங்க.

படத்தை மிகவும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எடுத்திருந்தார். இது முடிந்த்தும் என்னை அழைத்து வந்தவரிடம் ஐஸ் கிரீம் வாங்கி கேட்டேன். உடனே அவர் காலில் போட்டிருந்த செருப்பை பார்க்க, “லொக் லொக்” என்று இருமி எனக்கு கோல்ட் இருப்பது போல நடித்து எனக்கு ஐஸ்கிரீம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இதன் பிறகு இலவச இணைப்பாக இன்னொரு படமும் ஓடியது. அப்போது தான் தெரிந்த்து இதுவரை பார்த்த்து விழிப்புணர்வு விளம்பரம் என்று. தியேட்டருக்கு வந்து நாளாகிறதல்லவா.. அதான் சிறு கன்பீசன்.

படத்தின் சுவாரஸ்யங்கள் சில:

ஹாலிவுட்டில் யூ டிவி எடுக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டு தான். ஆனால் தமிழில் எடுக்கும் படங்கள் மட்டும் ஏனோ தோல்வியிலேயே முடிஞ்சிருக்கு. பரசுராம் வயது 55 க்கு பிறகு யூ டிவிக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.


முதல் முறையாக சுந்தர்.சி படம் மிகவும் ஸ்டைலிஷாகவும் ரிச்சாகவும் இருக்கிறது. இதற்கு முன் அவர் டைரக்ட் செய்த காதல், வழக்கு எண் போன்ற படங்கள் மிக லோ பட்ஜெட்டில் எடுத்த்து போல இருக்கும். ஆனால் இந்த படம் ஒரு ஃப்ரஷ் பீலிங்கை தருகிறது என்று என் அருகில் இருப்பவரிடம் கூறினேன். ஏண்டா நாயே... மத்த எல்லா படத்தையும் திருட்டு டிவிடில பாத்துட்டு இந்த படத்த மட்டும் தியேட்டர்ல போய் பாத்தா ப்ரஷ் பீலிங்கா தான் இருக்கும். மூடிக்கிட்டு பாரு.. இல்லைன்னா டிக்கெட் காச வச்சிட்டு ஓடிரு என்றார். அதன் பிறகு நான் அதிகம் பேசவில்லை.

எப்போ சுந்தர்.சி படம் நடிக்க போனாரோ அப்பவே அவர் டவுன் ஆக ஆரம்பிச்சிட்டார்னு சொன்னாங்க. ஆனா மினிம்ம் கேரண்டிக்கு உத்தரவாதம் கொடுத்த இயக்குனர். ஒரு முறை அவர் பட டிவிடிக்கள் ஸ்க்ராட்ச் ஆகிவிட்டது என்று சென்று கடையில் ஃப்ரீ ரீப்ளேஸ்மெண்ட் கேட்டேன். டிவிடியை இரண்டாக உடைத்து முகத்தில் வீசிவிட்டனர். அப்போதுதான் தெரிநது அந்த கேரண்டி வேறு இந்த கேரண்டி வேறு என்று.

சித்தார்த் முதல் பாதியில் எலும்புருக்கி நோய் வந்த்தை போல் காட்சி தருகிறார். சில காட்சிகளில் என்முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வருகிற அளவு சகிக்க முடியாமல் தோன்றினார். பீட்டி பார்லர் சென்று வந்த பிறகுதான் ஓரளவு பார்ப்பது போல் தோற்றமளித்தார்.

ஹன்சிகா என்று எழுதுவதற்கு பதில் சின்ன ஷகிலா என்று எழுதலாம். கும்மென்று இருக்கிறார். “படம் நெடுக காஸ்டியும் அளவெடுத்த டைலர் ஓவர் ஷார்ப்பா ஸ்கர்ட் மிடிகளை தைத்து வைத்து ,அவர் வரும் இடங்களில் டயலாக்கை கூட கவனிக்க விடாமல் ஒரே இடத்தை நிலைக்குத்தி பார்க்க வைத்து இருக்கின்றார் என்றேன்” என் நண்பரிடம். நாயே நீ வந்ததே அதுக்கு தான.. பாத்து தொல... என்றவுடன் ஜாலியாக மறுபடியும் அளவெடுக்க ஆரம்பித்தேன்

சந்தானம் ரொம்ப நாள் கழித்து இந்த படத்தில் பார்மில் இருக்கிறார். இரண்டு செஞ்சுரியாவது அடிப்பார் என்று தோண்றுகிறது.

“ஏன் லூஸ் மோசன் மாதிரி பின்னாடி போற... யூரின் மாதிரி முன்னாடி போ” என்ற வசனம் என்னை மிகவும் கவர்ந்த்து. படம் முடிந்து வெளியில் வந்த போது ஒரு ஆண்டி ஹோண்டா சிட்டியை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்த்து. “ஏன் லூஸ் மோசன் மாதிரி பின்னாடி போறீங்க... யூரின் மாதிரி முன்னாடி போங்க” என்றேன் சிரித்துக் கொண்டே. பொளிச் என்று காரி துப்பிவிட்டு காரை நகர்த்தி சென்றது.

 ""நான் வில்லனா-? டேய் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பெரிய வித்யாசம் இல்லை... கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணா ஹீரோ.... கசமுசா பண்ணிட்டு  கல்யாணம்  பண்ணா வில்லன்"" என்ற டயலாக்கும் அருமை. அதே மாதிரிதான் “படம் பாத்துட்டு ரிவியூ எழுதுனா அவன் பதிவர்... ரிவியூ எழுதிட்டு படத்த பாத்தா அவன் பிரபல பதிவன்....” எப்புடி ....

அதே போல ஹன்சிகா தங்கி இருக்கும் லேடிஸ்  ஹாஸ்ட்டலில் பேபிஜெனிபர் ஹன்சிகா அந்த குண்டு பெண் பேசும் டயலாக்குகள் பிலாசிபியாக பேசுகின்றார்கள்.... டயலாக் வெரி வெரி இன்டரஸ்டிங்..  டயலாக் ரைட்டர் வெங்கட்  அவர்களுக்கு ஒரு பொக்கே பார்சல்... ஆனா காச மட்டும் யாராவது போகும் போது குடுத்துருங்க.


கேமராமேன் கோபி அமர்நாத்.... சந்தானத்தை  ஹண்ஷிகா கத்தியால்  குத்த தொள தொள  மினி ஸ்கார்ட்டில் ஓடிவர கேமராமேன் சந்தானத்தின் ஆங்கிளில் ஹன்சிகாவை காட்ட, பரவசத்தில் சீட்டின் மேல் ஏறி நின்று விசிலடித்தேன்...  “சொத்” தென தலையின் பின் ஒரு செருப்பு வந்து அடித்தது. நல்ல புது Bata செருப்பு. இன்னும் கொஞ்ச நேரம் நின்று கத்தினால் இன்னொரு செருப்பும் வரும். 500 ரூபாய் தேத்திடலாம் என்று சீட்டிலேயே நின்று கத்தினேன். அடுத்த முறை வந்த்து ஒரு லேடீஸ் செருப்பு. அதனால் பொத்தினாற் போல் கீழிறங்கிவிட்டேன். 

பாடல்கள் ஆஹா ஓஹா என்று இல்லை என்றாலும் எதோ ஓக்கே... ரொம்ப டீசண்டாக இருப்பதால் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

என் அருகில் இருந்தவர் மனோபாலாவின் போர்ஷன் சூப்பர்ல என்றார் என்னிடம். உடனே நான் “மேல் போர்ஷனா கீழ் போர்ஷனா?” என்றேன்... உடனே என்னை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இரண்டடி தள்ளி நடந்தார். ஏன் என்று புரியவில்லை.


போங்கையா எழுதி கை வலிக்குது... இதுக்கு மேல நீங்களே போய் பாத்து தெரிஞ்சுக்கோங்க... ( இதுக்கு மேல படத்துல மிச்சம் இருக்கது டைட்டில் கார்டு மட்டும் தான்)






அதயும் விட மாட்டியா






படக்குழுவினர் விபரம்.
Directed by Sundar C.
Produced by Ronnie Screwvala
Siddharth Roy Kapur
Khushboo Sundar
Written by Sundar C. (Screenplay)
Venkat (Dialogues)
Screenplay by Nalan Kumarasamy
Story by Sundar C.
Starring
Siddharth
Hansika Motwani
Santhanam
Ganesh Venkatraman
Music by C. Sathya
Cinematography Gopi Amarnath
Editing by Praveen K. L.
N. B. Srikanth
Studio UTV Motion Pictures
Avni Cinemax
Release date(s)
June 14, 2013[1]
Country India
Language Tamil
ஃபைனல் கிக்:

படம் முடிந்து வெளியில் வந்ததும், "த்தா ஹன்சிகா ஓடி வர்ற சீன்ல முன் சீட்டுல ஒருத்தன் எழுந்து நின்னு மறைச்சிட்டாண்ணே... " என்று நான் ஆரம்பிக்க 
"அதுக்கு?" என்றார் அவர்
"அப்புடியே படத்தோட டிவிடி வாங்கி குடுத்தீங்கன்னா வீட்டுல உக்காந்து சாவுகாசமா பாப்பேன்" என்றேன். மறுபடியும் அவர் காலில் இருந்த செருப்பை பார்க்க  பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.









show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி ...மேலும் வாசிக்க
பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் செய்து வந்தன . இந்த சிறப்பு முகாம்களை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கையும் வைத்தன . இந்நிலையில் இந்த முகாம்களை மூடும் நிமித்தமாக அங்குள்ள தமிழர்களை திருச்சி [...]

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நண்பர்களே... இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமை ரித்விக் கட்டக். திரைப்படம், நாடகம், சிறுகதைகள் என பன்முகம் ...மேலும் வாசிக்க

நண்பர்களே...
இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமை ரித்விக் கட்டக்.
திரைப்படம், நாடகம், சிறுகதைகள் என பன்முகம் கொண்டவர்.
உலகம் முழுக்க,
திரைப்படக்கலையை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில்,
அவரது திரைப்படங்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

ரித்விக் கட்டக் படைப்பில் மாஸ்டர் பீஸ் ‘மேக தக்க தாரா’.
இப்படத்தின் பாதிப்பில்தான்‘அவள் ஒரு தொடர் கதையை’
கே.பாலச்சந்தர் உருவாக்கினார்.


தெலுங்கிலும் இக்கதையை படமாக்கி வெற்றி கண்டார்.
அவள் ஒரு தொடர் கதை 1974 தமிழ் இயக்கம் : கே.பாலச்சந்தர்.
அந்துலேனி கதா 1974 தெலுங்கு இயக்கம் : கே.பாலச்சந்தர்.

அவள் ஒரு தொடர் கதையை பின்னர் வங்காளம், ஹிந்தி, கன்னடம் மொழிகளில் பிற இயக்குனர்கள் படைத்து வெற்றி கண்டார்கள்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மூலமான மேக தக்க தாராவையும்,
ரித்விக் கட்டக்கையும் யாருமே கண்டு கொள்ளவில்லை.
Kabita 1977 Bengali Directed by : Bharat Shamsher.


கமல், தமிழில்  அவள் ஒரு தொடர் கதையில் ஏற்ற கதாபாத்திரத்தை... தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் ஏற்று சிறப்பித்தார்.
[இந்தியில் மட்டும் செய்யவில்லை.]

ரித்விக் கட்டக்கின் படங்கள்,
அவரது வங்காள நாட்டிலேயே புறக்கணிக்கப்பட்டது.
சத்யஜித்ரே கொண்டாடப்பட்டார்.
ரித்விக் கட்டக் புறக்கணிக்கப்பட்டார்.


ரித்விக் கட்டக்கின் மூன்று படங்களை
ஒரே நாளில் திரையிட்டது...‘கோணங்கள் பிலிம் சொசைட்டி’.
அந்நாள்  ‘கோவை சினிமா ரசிகர்களுக்கு’ பொன்னாள்.

[ 1 ] மேக தக்க தாரா 1960 வங்காளம் இயக்கம் : ரித்விக் கட்டக்.


[ 2 ] கோமல் கந்தார் 1961 வங்காளம் இயக்கம் : ரித்விக் கட்டக்.


[ 3 ] சுபர்ண ரேகா 1962 வங்காளம் இயக்கம் : ரித்விக் கட்டக்.


மூன்று படங்களும் அவரது ‘டிரையாலஜி’.
வங்காளப்பிரிவினையை மையமாக கொண்டது.
கிழக்கு வங்காளத்தில் பிறந்து, பிரிவினையின் போது...
மேற்கு வங்காளத்தில் நடப்பட்டவர் ரித்விக் கட்டக்.
எனவே அவரது படங்களில் பிரிவினையின் சோகம் அடிநாதமாக இருக்கும்.

இந்தியாவின் முதல் நியோ ரியலிசப்படமான ‘சின்னமோல்’ திரைப்படத்தில் அதை உருவாக்கிய நிமோய் கோஷுக்கு உதவியாளராக பணி புரிந்தார்.
அவரிடம் திரைப்படக்கலையை கற்றார்.
குருவைப்போலவே ‘ரஷ்ய படைப்பாளிகளின்’ படைப்புகளை ஆராதித்தார்.
ரித்விக் கட்டக் இயக்கி எட்டு படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

ரித்விக் கட்டக் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் துணை முதல்வராக பணியாற்றினார்.
அவர் உருவாக்கிய சிஷ்யர்கள்தான் இந்திய சினிமாவின் புகழை உலகறியச்செய்து வருகிறார்கள்.
அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள்,
அடூர் கோபாலகிருஷ்ணன், மீரா நாயர், மணி கவுல், ஜான் ஆப்ரஹாம்,
குமார் சஹானி, சயீத் அக்தார் மிர்ஸா.

அவரது முக்கிய சீடரான திரு.ஹரிகரன் அவர்கள் தனது குருவை பற்றி
கூறியதை பார்ப்போம்.
[ திரு.ஹரிகரன் அவர்கள் ‘ஏழாவது மனிதன்’ என்ற சிறந்த படத்தை உருவாக்கியவர்.
தற்போது பிரசாத் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தலைவராக இருக்கிறார்.

“ இந்திய சினிமாவின் மிகவும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால்,
அது ‘ரித்விக் கட்டக்’ காகத்தான் இருக்க முடியும்.
அதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்தியக்கலைஞர்களிலேயே மிகவும் புதிராக, புரிந்து கொள்ள முடியாதவருமாக விளங்கியவரும்
ரித்விக் கட்டக்தான்.

சிலரின் பார்வையில், ரித்விக் கட்டக் ஒரு வினோத மேதை.
ஆனால் அவர்கள் பார்க்கத்தவறுவது,
கீழ்மட்ட ஏழை மக்களின் மீது அவருக்கிருந்த அன்பும், அக்கறையும்,
ஆழமான நேசமுமாகும்.

இன்னும் சிலரின் பார்வையில், அவர் சோகம் மற்றும் நாடகத்தின் வல்லுனன்.
ஆனால், இவர்கள் தெரிந்து கொள்ளாதது...
அவரது ஒவ்வொரு ‘ஷாட்டின்’ பின்னால் உள்ள அன்னியோன்யமும், ஆழமான ஒழுங்கு முறையும் ஆகும்.

மற்றும் சிலருக்கோ, அவர் ஒரு கலைப்பட இயக்குனர்.
ஆனால் அவர்கள் அறியாதது,
தன்னுடைய படங்கள் பற்றிய சாதாரண மனிதனின் கருத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறை.

அவர் எப்போதுமே, தன் படங்களைப்பற்றி பேசுவது...
தன் படங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
அவரின் ‘மேக தக்க தாரா’ அல்லது ‘சுபர்ண ரேகா’ படத்தை இன்றும் ஒருவர் பத்தாவது முறை பார்க்கும் போதும் கண்கள் குளமாகும்.
அப்போது  ‘படங்களை பற்றி படங்கள்தான் பேச வேண்டும்’ 
என்ற அவரின் கருத்து நமக்கு புரிகிறது.

அதிர்ஷ்டவசமாக அவரின் மறைவுக்கு பின்பாவது இப்போது அவரது படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்கள் எத்தகைய ஒரு இந்திய சினிமா மேதையை அவரது சொந்த வாழ்நாளின் போது இழந்து விட்டோம் என்பதை உணர்கின்றனர்.
அவர் இருந்திருந்தால் இந்திய சினிமாவுக்கு இன்னும் செழுமை ஊட்டி இருப்பாரோ ?
நிச்சயம் செய்திருப்பார்”. - கே.ஹரிகரன் 
30 - 1 - 1990
சென்னை.

நூல் : ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை
முதல் பதிப்பு 1990.
வெளியீடு : சென்னை பிலிம் சொசைட்டி.

ரிதவிக் கட்டக் இயக்கிய படங்கள்,மற்றும் மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை அணுகவும்.

ரித்விக் கட்டக் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயா செல்க...

ரித்விக் கட்டக்கின் படைப்புகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும்...

ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் அஸ்திவாரமாக இருந்து விட்டார்.
அஸ்திவாரங்கள் தெரிவதில்லை.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மாங்கனியின் சுவையை உன் மார்பிலே கண்டேன் பலாவின் சுவையை உன் அடிபற்றி உண்டேன் ...மேலும் வாசிக்க


மாங்கனியின் சுவையை
உன் மார்பிலே கண்டேன்
பலாவின் சுவையை
உன் அடிபற்றி உண்டேன்
வாழையின் சுவைமட்டும்
என்னிடத்தில் தந்தேன்
பெண்னிடத்தில் ஆணிடத்தில்
இருக்கிறதடி
முக்கனியின் சுவையும்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஒரே ஒரு படம் ஹிட்டானால் போதும் அதை வைத்துக் கொண்டு அடுத்து ஐந்து படங்களை பிளாப் படங்களாகக் கொடுத்தும் கூட தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க ...மேலும் வாசிக்க

ஒரே ஒரு படம் ஹிட்டானால் போதும் அதை வைத்துக் கொண்டு அடுத்து ஐந்து படங்களை பிளாப் படங்களாகக் கொடுத்தும் கூட தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். பசங்க படத்தில் அறிமுகமான விமலுக்கு அந்தப் படம் ஹிட் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வெளியான களவாணி படமோ சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து வெளியான தூங்கா நகரம், எத்தன் படங்கள் பெரிய அளவுக்கு போகவில்லை. வாகை சூடவா படத்திற்கு நல்ல படம் என்ற பெயர்தான் கிடைத்ததே தவிர கலெக்க்ஷன் படு மோசம். கலகலப்பும், கேடி பில்லா கில்லாடி ரங்காவும் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தன. இஷ்டம், சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூன்று பேர் மூனறு காதல் என இவர் நடிப்பில் உருவான மற்ற படங்களும் புஷ்வாணமாகிப் போயின. எது எப்படியோ வந்த வரைக்கும் லாபம் என்று கல்லா கட்டுவதிலேயே தீவிரமாக இறங்கிவிட்டதாலோ என்னவோ விமல் அறிமுகமானதிலிருந்து இதுவரை 14 படங்களில் நடித்துவிட்டார்.

Jannal-Oram-movie-stills

ஆனாலும் இவர் பெயர் சொல்லுகிற மாதிரி அமைந்த படங்கள் நான்கோ ஐந்தோதான். இந்த வருடத்தில் மட்டும் இவர் நடிப்பில் வெளியானது படப்பிடிப்பில் இருக்கும் படங்களும் சேர்த்து மொத்தம் 10. இவற்றில் சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூன்று பேர் மூன்று காதல் ஆகியவை ரிலீஸ் ஆகிவிட்டன. ரெண்டாவது படம், தேசிங்கு ராஜா, நேற்று இன்று, ஜன்னல் ஓரம் ஆகியவை ரிலீசுக்குத் ரெடியாகிவிட்டன. வெயிலோடு விளையாடு, மஞ்சப்பை, புலிவால் ஆகியவை படப்பிடிப்பில் இருக்கின்றன. ஒரே வருடத்தில் 10 படங்கள் என்பது பெரிய சாதனைதான். ஆனால் இவற்றில் எத்தனை ஹிட் ஆகும் என்பதுதான் கேள்வி! கீப் இட் அப் பாஸ்…!


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர், நடிகர், சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ...மேலும் வாசிக்க
இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர், நடிகர், சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது.  கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்...
"இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர், என் ஆசான், நான் இப்போதும் போற்றும் இயக்குநர் பாரதிராஜாதான். அவர் இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயோ திசைமாறிப் போயிருக்கும்.

<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/p1tcW7VVmgk" frameborder="0" allowfullscreen></iframe>

நான் சொன்ன `நிழல்கள்' என்கிற கதையைக் கேட்டு சிலாகித்துப் போய் அதையே தன்னுடைய அடுத்த படத்துக்கான கதையாக முடிவு செய்து அந்தப்படத்துக்கு வசனமும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு தந்தார்கள். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அப்போது பாரதிராஜா அவர்களுடைய நண்பர்கள் "சொன்னா கேட்கமாட்ட எவனோ ஒருத்தன் கோயம்புத்தூர்ல இருந்து கண்ணாடி, ஜிப்பா போட்டுட்டு வந்தான். அவனை ஒரு பெரிய அறிவாளியா நெனச்சிக்கிட்டு நீ வந்து இந்தப்படத்தை எடுத்து, இதுவரைக்கும் பெயிலியரே கொடுக்காத... நீ இப்போ ஒரு பெயிலியர் கொடுத்து, உன் பேரை கெடுத்துட்ட பாத்தியா... சக்சஸ் குடுக்கலே"ன்னு சொன்னாங்க.

அப்போ அவரு சொன்னாரு.., நான் வந்து இதே மணிவண்ணனை வெச்சு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குறேனா? இல்லையான்னு பாருங்கன்னு சொல்லி, மணி உன்ன நம்பி அவனுங்ககிட்ட நான் வார்த்தை கொடுத்துட்டேன். நீதான் பொறுப்பு.. அந்தக்கதையை நீ எப்படி எழுதுவியோ எனக்கு தெரியாது, உனக்கு ஒரு பத்து நாள் டைம் தர்றேன்னு சொன்னாரு.

அதுக்கப்புறம் நான் எழுதின படம்தான் `அலைகள் ஓய்வதில்லை'. அந்தப்படம் தமிழக அரசினுடைய 9 விருதுகளை பெற்றுத் தந்தது. அதில் சிறந்த கதையாசிரியர் மற்றும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான இரண்டு விருதுகளை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் இருந்து பெற்றேன்.

இன்றைக்கும் அரசியல் ரீதியாக, சில சொந்த விறுப்பு,வெறுப்புகளில் நான் விலகி இருந்தாலும் கூட - அம்மா அப்பாக்கிட்ட சண்டை போடுறதில்லையா அந்த மாதிரி தான்... - அவரை வந்து நான் எப்போதும் என்னுடைய இரண்டாவது தாய், இரண்டாவது தந்தை என்று தான் நினைக்கிறேன்.

அவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னை அறியாமல் எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அந்த நன்றி உணர்வு தான் இன்றைக்கு எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட நம்புகிறேன்.

என் நேசத்துக்குரிய ஆசான் அப்பா வணக்கம், இன்னைக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தால, உங்களுடைய அரவணைப்பால நான் சிறந்த நிலையில இருக்கேன். எனக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க.., நேத்து மாதிரி இருக்கு, இன்னைக்கு என் மகளுக்கும் திருமணம் ஆயிடுச்சி, என் மகனுக்கும் ஆகப்போகுது, நாட்கள் வேகமாக நகர்ந்துடுச்சு.

எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும், எத்தனையோ பேர் நம்மளை சிலாகித்து பேசினாலும் அப்பா சத்தியமா சொல்றேன் நான் எப்பவும் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான்.( கண்ணீர் விட்டு அழுகிறார் மணிவண்ணன்...)

நான் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான், என்மேல ஏதாவது கோபம் இருந்தா என்னை ஒரு அறை விட்டுருங்க; தயவுசெய்து பேசாம மட்டும் இருக்காதீங்க.., ப்ளீஸ்... ப்ளீஸ்பா...." - மெல்லக் கரைகிறது மணிவண்ணனின் குரல். நீரால் நிறைகின்றன கண்கள்!
http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


//மணிவண்ணன் இளமையில், கோவையில் இருந்த காலத்தில்... ‘தீவிரமான கம்யூனிஸ்ட் இயக்க போராளியாக’ இருந்தார். போராளிகளை, போலிஸ் ‘நக்ஸலைட்’ ...மேலும் வாசிக்க
//மணிவண்ணன் இளமையில், கோவையில் இருந்த காலத்தில்... ‘தீவிரமான கம்யூனிஸ்ட் இயக்க போராளியாக’ இருந்தார். போராளிகளை, போலிஸ் ‘நக்ஸலைட்’ என அழைக்கும்.
முக்கிய நக்சல்களை ‘என்கவுண்டரில்’ போட்டுத்தள்ள திட்டமிட்டது. லிஸ்டில், முதல் பெயர் மணிவண்ணன். தகவலறிந்த நண்பர்கள் மணிவண்ணனை சென்னைக்கு கடத்தினார்கள்.//


- உலக சினிமா ரசிகன் - தன்னுடைய வலைப்பதிவில்...

//பொதுவுடமை கட்சியில் தீவிரமாக வேலை செய்தவர்.கட்சிக்காக சுவரெழுத்து எழுதி உழைத்தவர்.அவரின் தீவிர பொதுவுடமை கருத்துக்களை ஏற்க முடியாமல் கட்சியில் இருந்து தீவிரகம்யுனிஸ்ட் என்று முத்திரை குத்தி தூக்கி வீசப்பட்டவர்.//

- இயக்குநர் களஞ்சியம் - முகநூலில்!

ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவருக்கு ஒளிவட்டம் போடுவதற்காக ஜு.வி., நக்கீரன் ரேஞ்சை விட அதிகமாக எழுதி தள்ளுகிறார்கள். ஏகமாய் அள்ளிவிட்டு,  இருக்கிற நற்பெயரையும் கெடுக்கிறார்கள்.

கோவையில் இருந்த பொழுது பொதுவுடைமை அமைப்பில் வேலை செய்தவர். திரைப்பட ஆர்வத்தில் அமைப்பை விட்டு விலகி, சென்னைக்கு நகர்ந்தவர் என்று தான் ஒரு தோழர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.

உள்ளதை உள்ளதுபடி எழுத தெரியாதோ?!

மற்றபடி, மணிவண்ணன் எனக்கும் பிடித்த நடிகர் தான்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர்- நடிகர்-சமூகப் போராளி அமரர் ...மேலும் வாசிக்க

இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர்- நடிகர்-சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது. 

கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்... 

"இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர், என் ஆசான், நான் இப்போதும் போற்றும் இயக்குநர் பாரதிராஜாதான். அவர் இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயோ திசைமாறிப் போயிருக்கும். 

நான் சொன்ன ‘நிழல்கள்' என்கிற கதையைக் கேட்டு சிலாகித்துப் போய் அதையே தன்னுடைய அடுத்த படத்துக்கான கதையாக முடிவு செய்து அந்தப்படத்துக்கு வசனமும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு தந்தார்கள். 

ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அப்போது பாரதிராஜா அவர்களுடைய நண்பர்கள் "சொன்னா கேட்கமாட்ட எவனோ ஒருத்தன் கோயம்புத்தூர்ல இருந்து கண்ணாடி, ஜிப்பா போட்டுட்டு வந்தான். அவனை ஒரு பெரிய அறிவாளியா நெனச்சிக்கிட்டு நீ வந்து இந்தப்படத்தை எடுத்து, இதுவரைக்கும் பெயிலியரே கொடுக்காத... நீ இப்போ ஒரு பெயிலியர் கொடுத்து, உன் பேரை கெடுத்துட்ட பாத்தியா... சக்சஸ் குடுக்கலே"ன்னு சொன்னாங்க. 

அப்போ அவரு சொன்னாரு.., நான் வந்து இதே மணிவண்ணனை வெச்சு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குறேனா? இல்லையான்னு பாருங்கன்னு சொல்லி, மணி உன்ன நம்பி அவனுங்ககிட்ட நான் வார்த்தை கொடுத்துட்டேன். நீதான் பொறுப்பு.. அந்தக்கதையை நீ எப்படி எழுதுவியோ எனக்கு தெரியாது, உனக்கு ஒரு பத்து நாள் டைம் தர்றேன்னு சொன்னாரு. 

அதுக்கப்புறம் நான் எழுதின படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை'. அந்தப்படம் தமிழக அரசினுடைய 9 விருதுகளை பெற்றுத் தந்தது. அதில் சிறந்த கதையாசிரியர் மற்றும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான இரண்டு விருதுகளை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் இருந்து பெற்றேன். 

இன்றைக்கும் அரசியல் ரீதியாக, சில சொந்த விறுப்பு,வெறுப்புகளில் நான் விலகி இருந்தாலும் கூட - அம்மா அப்பாக்கிட்ட சண்டை போடுறதில்லையா அந்த மாதிரி தான்... - அவரை வந்து நான் எப்போதும் என்னுடைய இரண்டாவது தாய், இரண்டாவது தந்தை என்று தான் நினைக்கிறேன். அவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னை அறியாமல் எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும்.

அந்த நன்றி உணர்வு தான் இன்றைக்கு எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட நம்புகிறேன். 



என் நேசத்துக்குரிய ஆசான் அப்பா வணக்கம், 

இன்னைக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தால, உங்களுடைய அரவணைப்பால நான் சிறந்த நிலையில இருக்கேன். எனக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க.., நேத்து மாதிரி இருக்கு, இன்னைக்கு என் மகளுக்கும் திருமணம் ஆயிடுச்சி, என் மகனுக்கும் ஆகப்போகுது, நாட்கள் வேகமாக நகர்ந்துடுச்சு. 

எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும், எத்தனையோ பேர் நம்மளை சிலாகித்து பேசினாலும் அப்பா சத்தியமா சொல்றேன் நான் எப்பவும் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான்.( கண்ணீர் விட்டு அழுகிறார் மணிவண்ணன்...) நான் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான், என்மேல ஏதாவது கோபம் இருந்தா என்னை ஒரு அறை விட்டுருங்க; தயவுசெய்து பேசாம மட்டும் இருக்காதீங்க.., ப்ளீஸ்... ப்ளீஸ்பா...." - 

மெல்லக் கரைகிறது மணிவண்ணனின் குரல். நீரால் நிறைகின்றன கண்கள்! ஆனால், இதற்கு பாரதிராஜா ஆனந்த விகடனில் மணிவண்ணன் குறித்து கடுமையான கருத்துக்களுடன் பதில் தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நல்ல நல்ல படங்ககளையெல்லா ரீமேக் பண்றேன்னு நிறைய பேரு கெளம்பி வந்து ஒரிஜினல் படங்ளோட தரத்துல கால் பகுதிய ...மேலும் வாசிக்க
நல்ல நல்ல படங்ககளையெல்லா ரீமேக் பண்றேன்னு நிறைய பேரு கெளம்பி வந்து ஒரிஜினல் படங்ளோட தரத்துல கால் பகுதிய கூட தொடமுடியாத நிலமை தான் இப்பல்லாம். ஆனா தில்லு முல்லு ரீமேக் பண்றாங்கன்னப்போ, அதுவும் மிர்ச்சி சிவாவ வச்சி ஆரம்பிக்கிராங்கன்னப்போ சந்தோஷமா இருந்துச்சி. அதுமட்டும் இல்லாம தேங்காய் சீனிவாசன் கேரக்டர்ல ப்ரகாஷ்ராஜ் வேற நடிக்கிறாருன்னு கேள்விப்பட்டப்போ பட்டைய கிளப்பப் போகுது படம்னு நெனைச்சிட்டு இருந்தேன். ஒட்டுமொத்த நெனப்புலயும் மண்ண அள்ளி போட்டுட்டு வந்து நிக்கிது இந்த தில்லு  முல்லு  த ரீ மேக்.

"காதலா காதலா" படத்துல கமலும் ஹனீஃபாவும் வர்ற சாமியார் சீன் மாதிரி ஒரு சம்பந்தமே  இல்லாத சீனோட படம் ஆரம்பிக்குது. சென்னை 28, தமிழ்ப்படம் மற்றும் கோவாவுல அசால்ட்டான நடிப்புல எல்லாருக்கும் புடிச்சவராயிட்டருசிவா. சிலர் கதைக்கு ஏத்தா மாதிரி தன்னோட நடிப்பையும்   மாத்திக்குவாங்க. ஆனா சிவா அதுக்கு நேர் எதிரானவரு. இவருக்கு என்ன நடிக்க வருதோ அதுக்கு ஏத்த மாதிரி தான் டைரக்டருங்க கதை எழுதிக்கனும் போலருக்கு. லூசு பய... ஒரு சீன் கூட ஒழுங்கா நடிக்கிறதுக்கு ட்ரை கூட
பண்ணல. இந்த நாயி ஒரிஜினல் தில்லு முல்ல பாத்துச்சா என்னன்னே தெரியல.


ஆஃபீச கட் அடிச்சிட்டு foot ball மேட்சுக்கு போகனும். தங்கச்சிக்கு ஒடம்பு சரி இல்லைன்னு ஃபோன் பண்றேன்னு சொன்ன ஃப்ரண்டு மாத்தி அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு ஃபோன் பண்ணிடுறான். இந்த சீன்ல ரஜினி தேங்காய் சீனிவாசன சமாளிக்கிறத எவ்ளோ சூப்பரா எடுத்துருப்பாங்க. இங்கயும் எடுத்துருக்காய்ங்க பாருங்க.. கண்றாவி... இவன வச்சி இதுக்கு மேல ஒண்ணும் முடியாதுன்னு டைரக்டருக்கு தெரிஞ்சி போச்சி போலருக்கு. நீ எதோ பண்றத பண்ணுன்னு விட்டுட்டாரு,

ஒரு கேரக்டர் நல்ல கண்ணு பசுபதி..இன்னொரு கேரக்டர் பூனைக்கண்ணு கங்குலி கந்தன். ஒரு சீன்ல "நா சின்ன வயசுலயே கேக்ல முட்டை இருக்கும்ங்கறதால கேக் சாப்டமாட்டேன்" ன்னு ப்ரகாஷ்ரஜ் கிட்ட பசுபதி சொல்ல, "அதெப்டி சின்ன வயசுலயே கேக்குல முட்டை இருக்கது உனக்கு தெரியும்" னு படையப்பால "பாம்பு புத்துக்குள்ள கையவிட்டது எப்புடிங்கோ"ன்னு கேட்டுகிட்டே இருக்கது அருவை.

இன்னொன்னு சவுக்கார் ஜானகி கேரக்டர்ல கோவை சரளா. உண்மையிலயே ரொம்ப நல்ல சாய்ஸ். ஆனா இப்பல்லாம் கோவைசரளா ஒரிஜினல் ஆக்டிங்க விட்டுட்டு ஓவர் ஆக்டிங் தான் அதிகம் பண்ணுது. சாராயம் விக்கிற பொம்பளையாம்.. லோக்கல் தமிழ்தான் இதுக்கு பேச வருமாம். அதுக்காக ப்ரகாஷ்ராஜ் வர்றப்போ விரதம்னு நாக்குல வேல் குத்தி உக்கார வச்சிருக்காய்ங்க. ஏண்டா மொன்னைங்களா எந்த ஊர்லடா வீட்ல விரதம் இருக்கும் போது நாக்குல வேல் குத்தி வச்சிருக்காய்ங்க. சரி எதோ ஒரு சீன்னாலும் பரவால்ல. ஆனா ப்ரகாஷ்ராஜ் கோவை சரளாவ பாக்குற அத்தனை சீனும் நாக்குல வேல் குத்திட்டு தான் இருக்கு.

தேங்காய் சீனிவாசனா ப்ரகாஷ்ராஜ்.. படத்துல நா நம்பி இருந்த இன்னொருத்தர். இவருக்கு நடிப்ப வெளிப்படுத்துற மாதிரி சீனும் எந்த டைரக்டர் அமைச்சி குடுக்கலன்னு தான் சொல்லனும். இப்புடி எடுக்குறதுக்கு எதுக்குங்க உங்களுக்கு ப்ரகாஷ்ராஜ்... வேற யாரையாச்சும் போட்டு பட்ஜெட்டயாது கம்மி பண்ணிருக்கலாம்.

பாட்டு BGM ரெண்டும் ஓக்கே தான். தில்லு முல்லு ரீமிக்ஸ் பாட்டு ரொம்ப நல்லாருக்கு. ராகங்கள் பதினாரும் ஓக்கே தான். ஆனா சம்பந்தமே இல்லாத ஒரு சிட்டுவேஷன்ல வந்து எரிச்சலாக்குது. ஹீரோயின் யாருன்னு தெரில. ஆனா ஹீரோயின விட சிவா தங்கச்சியா வர்ற பாப்பா ரொம்ப அழகா இருந்துச்சி. அதயே ஹீரோயினா போட்டுருக்கலாம் போலருக்கு. இன்னொரு கொடுமையான விஷயம் அந்த அழகு புள்ளைக்கு ஜோடி பரோட்டா சூரி. கண்றாவி. சமீபகாலமா பரோட்டா  சூரி நல்ல ஃபார்ம்ல இருந்தாரு. ஆனா இந்த படத்துல அவர் பண்ற எந்த காமெடிக்குமே சிரிப்பு வர்ல.

அப்புறம் நாகேஷ் கேரக்டர்ல சட்டி சத்தியனும், பூர்ணம் விஸ்வநாதன் கேரக்டர்ல இளவரசுவும். ஓண்ணும் சொல்றதுக்கில்ல. ரஜினிய ப்ளாக்மெயில் பண்ற சின்ன பையன் கேரக்டர் படத்துல இல்லை. ஆமா உள்ள கேரக்டருங்களயே ஒழுங்கா யூஸ் பண்ணல. இதுல அவன் வேறயா. அப்புறம் படம் நல்ல பளிச்சின்னு சூப்பரா இருக்கு. கலர்ஃபுல்லாவும் இருக்கு. ஆனா அதுக்குன்னு படத்துல நடிச்சவங்க போட்டுருக்க ஸ்பெக்ஸ் ஃப்ரேம் கூட ஊதா, ரோஸ்ன்னு ஜிகு ஜிகுன்னு  இருக்கது கொஞ்சம் ஓவர்.

இதயும் மீறி படத்துல அங்கங்க சிரிக்க வக்கிறது சிவாவோட வழக்கான சில ஒண் லைனர்ஸ் தான். கடைசி 5 நிமிஷம் வர்ற சந்தானம்தான் தியேட்டரயே கலகலக்க வக்கிறாரு. யய்யா... நீ  கொஞ்சம் முன்னாலயே வந்துருக்க கூடாதாய்யா. சிவா சார்... கொஞ்சமாது நடிக்க முயற்சி பண்ணுங்க. இல்லைன்னா கொஞ்ச நாள்ல மூட்டை முடிச்செல்லாம் கட்டிகிட்டு கெளம்ப வேண்டியதான். டைரக்டர் பத்ரியோட "வீராப்பு" படம் எனக்கு ரொம்ப புடிக்கும். ஏன் ஐந்தாம் படை படத்த கூட அட்வான்ஸ் புக்கிங்ல பாத்த ஒரு சில பேர்ல நானும் ஒருத்தன். ஆனா இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றம்.

ஒரிஜினல் தில்லு முல்லு எல்லாரும் பாத்துருப்பாங்கன்னோ என்னவோ நிறைய காட்சி முழுமையாவே எடுக்கல.. அங்கங்க பிட்டு பிட்டா விட்டுட்டு ஓடுன மாதிரி இருக்கு. ஒரிஜினல் பட ரசிகர்களுக்கு இந்த தில்லு முல்லு த ரீ மேக் எரிச்சலை மட்டுமே தரும்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


 (என் கிறுக்கலில்)மேலும் வாசிக்க

 (என் கிறுக்கலில்)

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


திரைவிமர்சனம்




Ankur Arora Murder Case


Cable சங்கர்