வலைப்பதிவுகளின் திரை விமர்சனம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : January 28, 2012, 1:54 pm
சூடான சினிமா இடுகைகள்
சமீபத்தில் எழுதப்பட்ட திரை விமர்சனம்

நடிகர் விஜய் நடித்த “நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் ...மேலும் வாசிக்க
நடிகர் விஜய் நடித்த “நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.


திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர், இயக்குனர் ஷங்கர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு அக்கூட்டமைப்பின் தலைவர் சேம நாராயணன் அனுப்பியுள்ள கடிதம்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த ஆண்டி, பண்டார சமூகத்தினர்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளனர். அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.


நண்பன் திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வரும் வசனங்கள் அச்சமுதாய மக்கள் மனம் புண்படும் அளவிற்கு அமைந்துள்ளது.


ஆண்டி என்றும், பண்டாரம் என்றும் வரும் அந்த வார்த்தைகளையும், பாரி, பூரி, கக்கூஸ் நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மிக மிக நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் குவியல். ஆயிரம் பாலோயர்கள் தொட்டபிறகு ஒவ்வொரு நூறுக்கும் சொல்லும் நன்றி கூட சொல்ல முடியவில்லை. இணையம் பக்கம் ...மேலும் வாசிக்க
மிக மிக நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் குவியல். ஆயிரம் பாலோயர்கள் தொட்டபிறகு ஒவ்வொரு நூறுக்கும் சொல்லும் நன்றி கூட சொல்ல முடியவில்லை. இணையம் பக்கம் நெருங்க முடியாமலும், தன்னிச்சையான சிந்தனைகளுக்கு முட்டுகட்டை போடுமளவுக்கு வேலை பளுவும் இருந்தது, இப்போதும் அப்படி தான், ஆனால் அவை எனது சிந்தனை ஓட்டத்திற்கு மிகவும் தடையாகவும், தன்னம்பிக்கை குறைவாகவும் சிந்திக்க வைப்பதால் மாற்றம் வேண்டி மறுபடி பழைய வால்பையன் திரும்ப வந்துவிட்டான். பலமுறை அலைபேசியிலும், மெயிலிலும் அங்கே அந்த பழைய வால்பையன் என கேட்டு உசுப்பி விட்ட நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் இந்த குவியல் அர்பணம்!

****

இதை எழுதி கொண்டிருக்கும் பொழுது 1249 பாலோயர்ஸ் யார் அந்த 1250 ஆவது பாலோயர்னு தெரியல, என் பழைய குவியலை படித்தவர்களுக்கு தெரியும், என்னை பாலோ செய்யும் அனைவரையும் ப்ளாக் இருந்தால் கண்டிப்பாக நான் பாலோ செய்வேன், ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால் தெரியப்படுத்தவும்!

****

நான் இப்போது சென்னையில் இருப்பது பல நண்பர்களுக்கு தெரியாது, முன் செய்த தொழிலில் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிப்பார்கள், மேலும் என்மீது அக்கறை கொண்ட பலர் அது தனக்கு நேர்ந்த இழப்பாய் நினைப்பார்கள் என்பதே மிக முக்கிய காரணம். இன்று அறிந்தவர்கள் மன்னிக்கவும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்!, நான் இழந்தது கொஞ்சம் பணத்தையும், நிறைய நேரத்தையும் தான், நம்பிக்கையை அல்ல.

****

10 வருடங்களுக்கு முன் நான் வாழ்ந்த சென்னை சத்தியமாக இது இல்லை. இன்று எல்லாமே தலைகீழ். sky walk, express avenue என வாழ்க்கை எங்கேயோ போய் கொண்டிருக்கிறது. ஒரு சினிமாவுக்கு போகனும்னாலும் 500 வேணூம், எப்படி மக்கள் சமாளிக்கிறாங்கன்னு தெரியல, அதே நேரம் 15 ருபாய்க்கு சாம்பார் சாதமும் கிடைக்கிறது, 40 ரூபாய்க்கு கறிகுழம்பு, மீன்குழம்பு, முட்டை, கறியோடு சாப்பாடும் கிடைக்கிறது!, எங்கேயும் எப்போதும் படத்துல சொல்ற மாதிரி இது சென்னை இல்ல, மொத்த தமிழ்நாட்டின் அடையாளம்னு சொல்லலாம்!


****

”மெளனகுரு” ன்னு ஒரு படம் பார்த்தேன். நீண்ட நாள் கழித்து நல்லதொரு திரைக்கதையை பார்த்த மகிழ்ச்சி, அதே நேரம் ஆனந்தவிகடனில் அவர் அளித்த பேட்டியில் கமர்சியலுக்காக நான் நகைச்சுவையையோ, சண்டை காட்சிகளையோ, பாடலையோ புகுத்த மாட்டேன் என பேட்டி அளித்திருந்தார், நியாயமா பார்க்கனும்னா மெளனகுரு படத்தில் ஆர்த்தி என்ற கேரக்டருக்கு வேலையே இல்லை, அது வலுகட்டாயமாக திணிக்கப்பட்டது தானே, ஒருமுறை ஜெயித்ததும் தலையில் கணம் கூடிகொண்டது போல, அவரது ஆசிரியர் தருமி ஐயா கொஞ்சம் சொல்லி தட்டி வைக்கவும்!(இதுல ஐயா கடைசியில் நாயகனும், நாயகியும் சைக்கிளில் போவது போல் எதிர்பார்த்தாராம், அது தானே எல்லா படத்திலும் நடக்குது, இங்கேயும் எதற்கு)




மற்றபடி நான் மிகவும் ரசித்த the game என்ற திரைபடத்திற்கு நிகரான திரைக்கதை.
நாயகன் தவிர்த்து வில்லன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தம். நாயகன் மட்டும் காலைகடன் கழிக்க தவறியவர் போல் முகத்தை வைத்து கொண்டு திரிகிறார், அவர் சிரிக்கவே கூடாதுன்னு இயக்குனர் கட்டளை போல!. நாயகன் வசனங்கள் அனைத்தும் கூர்மை ஆனால் முகத்தில் எந்த பாவமும் இல்லை(இது அந்த பாவம் இல்லை, நான் சொல்றது முகபாவம்), அதுவும் இருந்திருந்தா அருள்நிதி இன்னொரு சூர்யாவாக, விக்ரமாக வாய்ப்பிருக்கிறது. நான் முழுநீள விமர்சனங்கள்(முழுநீள படம் தானே எடுப்பார்கள்) எழுதுவதில்லை அதுக்கு நம்ம அண்ணன் ஊனா தானா இருக்கிறார், அங்கே படித்து கொள்ளலாம்! :)

சாந்தகுமாருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, சினிமாவை எடுத்தால் அதை தமிழ்சினிமாவின் இலக்கணங்களுள் எடுத்தால் காலம் புறந்தள்ளி விடும்!

******

தனது தளத்தில் சாதி மறுப்பு திருமணத்திற்கு இலவச விளம்பரம் அளிப்பதாக அறிவித்திருந்தேன். கோவையில் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கல்யாணத்திற்கு தயாராக ஒரு மாப்பிள்ளை இருக்கிறார். சாதி, வசதி பிரச்சனையில்லை. மேற்படிப்புக்கு விருப்பப்பட்டாலும் அதை செய்து தர அவர் குடும்பம் தயாராக இருக்கிறது. தாய், தந்தை இல்லை. மாதம் 12,000 சம்பாதிக்கிறார்.
பெற்றோர் அற்ற ஆதரவற்ற பெண்ணுக்கு முன்னுரிமை. பெண்ணுக்கு 30 வயதுக்கு மேல் இருந்தால் இவருக்கு சூட்டாகாது, உங்களுக்கு தெரிந்து அப்படி எதாவது பெண் இருந்தால் எனது அலைபேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ தெரியப்படுத்தவும்!

9994500540

arunero@gmail.com

மேலதிக தகவல்கள் தனிப்பட்ட முறையில் தரப்படும்!

****

ரொம்ப நாளா எழுதாததால் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் குறைஞ்சிருக்கு, அதுனால பழைய கேள்வி பதில் பகுதியை(டோண்டு மூடிட்டார் போல) திறக்கலாம் என்றிருக்கிறேன். உங்கள் கேள்வி எதுவானாலும் எனது புரிதலில் நிச்சயம் பதிலளிக்கிறேன்.

கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் பெரியாள் இல்லை தான், இருப்பினும் பதில் தேடும் பொழுது ஏற்படும் அனுபவங்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கை தான்!

****

கவிதை மாதிரி..

குடியும், குடித்தனமும்.

கூடிக்கழித்து
குடித்து கும்மாளமிட்டதை தவிர
வேறொன்றும் மிச்சமில்லை
நலமா, சாப்பிட்டியா
என்பதை விட
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்
என்பதே இன்று
நட்புகளில் உரையாடல்கள்!
நீண்ட தூரம் சென்று
திரும்பிய பின் தான் தெரிகிறது
குடித்தனத்தை மறந்து விட்டோம் என்று!
முதல் தேதிக்கு இன்னும்
நான்கு நாட்கள் இருக்கிறது
அது வரை மாதசம்பளக்காரனின்
தத்துவம் தொடரும்!..

****

குடிவெறி எதிர்ப்பாளர்கள் அதிஷாவிற்கும், லக்கிக்கும் இது அர்ப்பணம்! :)

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


“சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” ...மேலும் வாசிக்க

cheran009

“சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்ற பெருநோக்கில் ‘உலகத் தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்..” என்று சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானத்தை விதைத்தவர் மார்க்ஸ். சமூக மறுமலர்ச்சிக்கு, புதிய தலைமுறையின் விடியலுக்கான அந்தப் பாதையில் விளைந்தது தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும். பாடுபடும் தொழிலாளர்களுக்கு நியாயமான, நேர்மையான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமான, நேர்மையான ஊதியம் எது? என்பதில் தான் இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் - தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை. திரைப்படத் தொழிலாளர் சம்மேளம் முன்வைக்கும் ஊதிய உயர்வை, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏன்?

‘லாபத்தில் பங்கு’ என்பது தான் நியாயம். தொழிலாளர்களைச் சுரண்டி முதலாளிகள் கொழுத்துத் திரிய, தொழிலாளர்களோ, கஷ்டத்திலும், வறுமையிலும் வாடிச்செத்ததைக் கண்டுதான் சோஷலிசம் - கம்யூனிசமாக உருப்பெற்றது. மிகப்பெரும் லாபமீட்டும் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு மிகச்சொற்பத் தொகையை ஊதியமாகக் கொடுத்தால், அதை எதிர்க்கும் முதலணியில் முதல் ஆளாக நிற்பது என் கடமையும், உரிமையும்.

இன்றைய இந்தியா முதலாளிகளின் கைப்பாவையாகத்தான் இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் ஊதுகுழலாகத்தான் சமூகத்தின் ஒட்டு மொத்த அமைப்பும் விளங்குகிறது. தொழிலாளிகள் அற்ப - சொற்ப சம்பளத்துக்கு தங்களது வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி முதலாளிகளை, பெரு முதலாளிகளாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக இது மாற வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் புற்றீசல் போல பெருகி நிறைந்திருக்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இன்றைய நம் வாழ்க்கையை அடகு வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன சாப்பிட வேண்டும்? என்ன குடிக்க வேண்டும்? எப்போது தூங்க வேண்டும்? எங்கு வசிக்க வேண்டும்? என்று சகலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்
குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு உழைக்க, அவர்களோ கொள்ளை லாபத்தில் கொழிக்கிறார்கள். இதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், இன்றைய திரைப்படத்துறை குறிப்பாகத் தமிழ் சினிமா என்ன நிலைமையில் இருக்கிறது? திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துக் கொண்டு, தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுக்கிறார்களா? பெருவாரியான லாபத்தை எடுத்துப் பதுக்கி வைக்கிறார்களா? கோடிகளில் புரள்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு, ஒரே பதில்.. இல்லை! என்பதுதான்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமா ஆரோக்யமானதாக இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அத்தனை பேரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். சினிமாப்படம் தயாரிக்க நான், நீ என்று ஆளாளுக்கு ஓடி வந்தனர்.

ஆனால் இன்றென்ன நிலைமை?

ஏராளமான திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், கொடவுன்களாகவும், வர்த்தக நிறுவனங்களாகவும் மாறி விட்டன. திரையரங்குக்கு உரிமையாளராக ஆக வேண்டும் என்ற நிலைமை மாறி, இருக்கிற தியேட்டரை விற்றால் போதும் என்றிருக்கிறது. திரைப்படங்களை வாங்கி, விற்கும் வினியோகஸ்தர்களும் அருகி விட்டனர். சரி.. திரைப்படங்களைத் தயாரிக்கவாவது யாரேனும் வருகிறார்களா என்றால், அதுவும் இல்லை.

பல முன்னணித் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுப்பதையே கைவிட்டு விட்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். படமெடுக்கும் மிகக் குறைந்த சிலரும், நஷ்டத்தை மட்டுமே சம்பாதிக்கின்றனர். கடந்த ஆண்டில் முதல் படத்தைத் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் மீண்டும் தயாரித்தார்கள்?

அப்படித் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் வெற்றியை அல்லது லாபத்தைக் கண்டார்கள்? கடந்த ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை? என்று கணக்கெடுத்தாலே போதும், இதற்கெல்லாம் நமக்கு விடை கிடைத்து விடும்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து, μசோன் மண்டலத்தில் துளை பெரிதாகிக் கொண்டிருப்பதைப் போல இன்னொரு உண்மை; தமிழ் சினிமா நசிந்து கொண்டிருக்கிறது. கோமாஸ்டேஜுக்கு சென்று கொண்டிருக்கிறது. திருட்டு வி.சி.டி.,க்கள் தொடங்கி, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வினியோக உரிமை என்று சகல விஷயங்களிலும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் நசுக்கப்பட்டு, செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு ஒரு சினிமாவைத் தயாரிப்பது லாபமான செயலா? என்று ஒரு குழந்தையைக் கேட்டால் கூட அது மறுத்து விடும். ஒரு ஆண்டில் ஏறத்தாழ நூறு திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிகபட்சம் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தொன்னூறு சதவீத தயாரிப்பாளர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர். மேலும், வெளியாகும் நூறு படங்களில் தொன்னூறு சதவீத படங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் தான். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் படங்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான். லாபத்தில் தானே பங்கு கொடுக்க முடியும்? நஷ்டத்தில் பங்கேற்க யாரும் தயாராக இல்லை. ஒரு படம் தோல்வியடைந்து விட்டது; போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறி கொடுத்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்க முடியுமா?

அதாவது, சினிமா - மற்றைய தொழில்களைப் போலல்லாது ஒரு சூதாட்டமாகிவிட்ட இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை நூறு சதவீதம் உயர்த்திக் கேட்பது எந்த நியாயம்?

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கமும் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய தொழிலாளர் விதிப்படி மேற்படி சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையே பெற வேண்டும். ஆனால், எதார்த்தம் என்ன? ஒரு படம் μடினால் மட்டுமே ஒரு இயக்குனர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியும். ஒளிப்பதிவாளர்களும், படத்தின் பட்ஜெட்டிற்கேற்ப மட்டுமே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஒருவர், அடுத்ததாக சிறிய பட்ஜெட் படத்தில் பணியாற்ற நேர்ந்தால், தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துத்தான் வாங்குகிறார். இந்த நியாய, தர்மங்கள் - தொழிலாளர்களுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா!

நூறு கோடி, ஐம்பது கோடியில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி.. ஒரு கோடி, இரண்டு கோடிகளில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி.. அவர்களுக்கு ஒரே ஊதியம் தான். எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களோ பத்து சதவீதம் தான். இது பாரபட்சமான அணுகுமுறை. பெரிய பட்ஜெட் படங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வாங்கிக் கொள்ளட்டும். அதுபோல, சிறிய பட்ஜெட் படங்களில் அவர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பதுதான் ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக நான் முன் வைக்கும் கருத்து.

சினிமா நலிந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை மேலும் நலியச்செய்து திரைப்படங்களைத் தயாரிக்கவே யாரும் முன்வராத ஒரு சூழலை திரைப்படத் தொழிலார்களே ஏன் செய்ய வேண்டும்? திரைப்படம் எடுக்காத ஊரில் அவர்கள் என்ன வேலை செய்ய முடியும்? இன்றைக்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை ஒருவர் தயாரித்தால், பட்ஜெட்டில் பாதியைத் தொழிலாளர்களுக்குத் தான் தரவேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பது லட்சத்தில் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு படத்தை, தொழிலாளர் சம்மேளன விதிகளுக்கு உட்பட்டு எடுத்தால் ஒரு கோடி ரூபாயில் தான் முடிக்க முடியும். அத்தனை நெருக்கடிகளை, சட்ட விதிகளை சம்மேளனம் முன்வைக்கிறது.

அதாவது, படத்துக்கு தேவைப்பட்டாலும், படாவிட்டாலும் ·பெப்சியின் 24 துறைகளைச் சேர்ந்த அனைவரையும் வேலைக்கு வைக்க வேண்டும். குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி காசு கொடுத்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள், படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் நியாயமா? இதுதான் தொழில் தர்மமா? வேலைக்கே ஆள் தேவைப்படாத போது, வேலைக்கு ஆள் வைக்கக் கட்டாயப்படுத்தி, அவர்களுக்குச் சம்பளம் வாங்கித்தருவது வழிப்பறிக் கொள்ளையாகத் தெரியவில்லையா?

தெரிந்தே நசுக்கும் இதுமாதிரியான சட்டங்கள், தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, படைப்பாளியான இயக்குனர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களுடைய சிந்தனைக்கு இடையூறு செய்வதின் மூலம், படத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. ‘என்னிடம் இருக்கும் ஒரு ஐம்பது லட்சத்தில் ஒரு திரைப்படம் எடுத்து விட முடியும்,’ என்று எந்த இயக்குனரும் நினைக்க முடியாது.

பெப்ஸி தொழிலாளர்களை வைத்து பணிசெய்யாவிட்டால், அந்தப் படமே திரைக்கு வரமுடியாது. இதுபோன்ற நெருக்கடிகளால், ஏகாதிபத்தியச் சிந்தனைகளால் தமிழ்த் திரையுலகமும், தமிழ் சினிமா ரசிகர்களும் இழந்து விட்ட சிறந்த படைப்புகள் ஏராளம்.. சிறந்த இயக்குனர்கள் ஏராளம். சினிமாவின் காட்சித்தன்மை இன்று மாறிவிட்டது. திரையரங்கிற்குச் சென்று மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லை.

டிஜிட்டல் சினிமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்த செலவில் டிஜிட்டல் கேமராவை வாங்கிவிட்டால் யார் வேண்டுமானாலும், படத்தை எடுத்துவிட முடியும். தொழிலாளர் நலன் என்ற போர்வையில் நிலவும் ஏகாதிபத்தியச் சட்டங்கள் ஒழிந்து விட்டால், ஆண்டொன்றுக்கு ஆயிரம் படங்கள் வெளியாகும். அதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை வெற்றி பெறும். அப்படி ஒரு சூழல் உருவாகும் போது, இப்போது சம்மேளனத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திறமை இருந்து, தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் சில லட்சங்களில் ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அதுவே, ·பெப்ஸி சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு படமெடுக்க வேண்டுமென்றால் அது ஒரு கோடி ரூபாய்க்குச் சற்றும் குறையாது. இது போன்ற எதேச்சதிகார, எதார்த்த நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான, தமிழ்த்திரையில் பல நல்ல படைப்புகளும், இயக்குனர்களும் உருப்பெற்று விடாமல் தடுக்கும் அரண்களைத் தகர்க்க வேண்டிய நேரமிது!.

படைப்பாளிகளையும், படைப்புகளையும் சிறை வைக்காதீர்கள். சினிமாவை ஒரு குடத்தில் மூடி வைக்காதீர்கள். அதைத் எல்லோருக்கும் திறந்து விடுங்கள். அது கங்கையாகப் பெருகி ஓடும். தேசத்தின் தாகத்தைத் தீர்க்கும். உலகெங்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும். தமிழ் சினிமா பீடுநடை போட்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும்.

இயக்குனர் சேரன்,
(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)

-------------------------------------------------------------------------------------
நண்பர்களே... http://www.hotlinksin.com திரட்டி இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா...?
-------------------------------------------------------------------------------------

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


திரை உலக முதலாளிகள் - தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது - ஏதோ அவர்களுக்குள் நடக்கின்ற முதலாளி v/s ...மேலும் வாசிக்க
திரை உலக முதலாளிகள் - தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது - ஏதோ அவர்களுக்குள் நடக்கின்ற முதலாளி v/s தொழிலாளி பிரச்சனை என்பதாக மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. பிரபலங்களின் சம்பளங்கள், முதலாளிமார்களின் பேட்டிகள், நடிகைகளின் பந்தாக்கள் - சாமானிய ரசிகர்களுக்கு திரைப்படங்கள் மீதே ஒரு இனம் புரியாத வெறுப்பை உண்டாக்கி "நாம் ஏன் திரைப்படங்கள்" பார்க்கவேண்டும் என்கிற மனநிலைக்கு தள்ளுகின்றன.

திருட்டு வி.சி.டியால் மாத்திரம் திரை உலகுக்கு ஆபத்தில்லை. உங்களது செயல்பாடுகளுமே வீழ்ச்சிக்கு வழிவகை செய்கிறது. திரையரங்குக்கு வருபவனை முட்டாள் என்று நினைத்து விட வேண்டாம். திரையரங்குக்கு வருபவனுக்கு - தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதும் தெரியும், தன் அபிமான நடிகர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதும் தெரியும். நடிகரின் சம்பளம் எவ்வளவு அநியாயத்துக்குரியது என்பதையும் அவன் அறிவான். தொழிலாளிகளுக்கு ஆதரவாக பேச - ஏழை பங்காளனாக நடிக்கும் எந்த நடிகரும் தயாரில்லை.




தாம் கோடிக்கணக்கில் பெறும் சம்பளம் அநியாயமாக தெரியவில்லை. ஓரே ஒரு பாட்டுக்கு ஆடக்கூட கோடிகளை கொட்ட தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களுக்கு - இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளத்தில் இருந்து முன்னூற்றி இருபதுக்கு போக மூக்கால் அழுகிறார்கள். வேறு சில வேலைகளுக்கான சம்பளத்தையும், எதிர்பார்க்கப்படும் சம்பளத்தையும் பார்ப்போம்.

 "லைட்மேன் - 350, 530. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 250, 320. மகளிர் யூனியன் - 290, 400. செட் அஸிஸ்டெண்ட் - 350, 625 டிரைவர்ஸ் யூனியன் - 270, 415. காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் - 700, 850. புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் - 350, 550.(சம்பள விபரம் : உண்மைத்தமிழன்) நான்கு வருஷத்திற்கு முந்தைய சம்பளம் அது. நான்கு வருஷத்தில் திரையரங்குகளில் கட்டணமே உயர்த்தப்படவில்லையா? நான்கு வருஷத்திற்கு முன் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பிள்ளை விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார்... இன்று எவ்வளவு வாங்குகிறார். கோடி மேல் கோடி ஏறிக் கொண்டே போய் இருக்குமே. அந்த சம்பளம் அநியாயமாக தெரியவில்லை - சங்க தலைவருக்கு.

 சாமானிய தொழிலாளி ஐம்பது ரூபாய் உயர்த்தி கேட்பது அநியாயமாக தெரிகிறது. நான்கு தையல் மிஷின் தருவது போல போஸ் கொடுத்தால் கொடை வள்ளலாகி விடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். சினிமாவில் ஒரு படத்துக்கு தரப்படும் பத்து கோடி, இருபது கோடி போதவில்லை என்று மலையாள ஆலுக்காஸ்க்கு விளம்பர மாடல். ஏழை தொழிலாளி - இப்படி சம்பாதிக்க ஏதேனும் வழி உள்ளதா? "முதல்வர் பேசி தீர்க்க வேண்டுமாம்". அம்மாவுக்கு வேறு வேலையே இல்லை பாருங்கள்.

தன்னிடம் பணிபுரிபவருக்கு காலத்துக்கேற்ப்ப ஊதியம் தருவதற்கு கூட முதல்வரோ அல்லது வேறு எவரோ வந்து சொன்னால் தான், "அது நியாயமான ஊதியம்" என்கிற உண்மை விளங்குமா? என்ன கொடுமைடா . "உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லை" என்று தொழிலாளிகளை பற்றி பாடினால் மட்டும் போதாதா? தொழிலாளி பிரச்சனை தீர்ந்து விடாது. சம்பளத்தை வேறு அதிகமாக தர வேண்டுமா என்று நினைக்கிறார்கள் போலும். சிக்கனம் பற்றி பேசுபவர்கள் நாயகர்களின் சம்பளம் குறைப்பு பற்றி தொடர்ந்து பேச தயங்குகிறார்கள்.

அப்படியே பேசினாலும் காற்றில் கரைகிற உடன்பாடாகவே உள்ளது. ரஜினியின் "உழைப்பாளி " திரைப்படம் தயாரிப்பில் இருந்தபோது - "பிரபல நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது குறித்து" கூட்டம் போட்டார்கள். அன்றைக்கு பிரபலங்கள் என்றால் ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ் போன்றவர்களே. இன்றைக்கு முதலமைச்சர் கனவு காணும் சுள்ளான்கள் எல்லாம் அன்றைக்கு திரை உலகில் இல்லை. அந்த கூட்டத்தில் - எல்லா தயாரிப்பாளர்கள் முகத்திலும் கறியை பூசும் விதமாக ரஜினி பாதியிலேயே கோபத்துடன் வெளியேறினார். கொஞ்ச நாட்களுக்கு அது செய்தியாக...

"ரஜினி படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்கக்கூடாது" என்று தடைப்போட பட்டாலும் - ஏ.வி.எம் நிறுவனம் தமிழகமெங்கும் உழைப்பாளி திரைப்படத்தை விநியோகம் செய்தது. அன்றைக்கே பூனையின் கழுத்தில் மணியை ஓழுங்காக கட்டி இருந்தால் - தமிழ் சினிமா பிரபலங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்கிற பேச்சு அவ்வப்போது எழுந்து கொண்டே இருந்து இருக்காது. தமிழகத்திலேயே ஒரே ஒரு நடிகர் - தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து - தம் சம்பளத்தை குறைத்து கொண்டார். அவர் சத்யராஜ். "என் பலம், பலவீனம் எனக்கு தெரியும். இந்த சம்பளமே எனக்கு பெரிசு" என்றார்.

சினிமாவில் இருக்கிற எல்லா கோடீஸ்வரன்களும் இப்படியே நினைத்தால் பிரச்சனை ஏது. எத்தனையோ முறை முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு - படப்பிடிப்பு ரத்தாகி, பல படங்கள் வெளியாவது காலதாமதமாகி உள்ளது. ஆனால் இனி அப்படியொரு நிலை ஏற்பட்டால் - பல திரையரங்குகள் மூடப்பட்டுவிடும். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் படங்கள் தேவைப்பட்டு கொண்டே இருக்கின்றன. படம் பார்க்க ஜனங்கள் வருகிறார்களோ இல்லையோ படங்களை மாற்றி கொண்டே இருக்க வேண்டி உள்ளது.

புதிய படங்கள் வெளியாவது குறைந்தால் - வேறு வழியின்றி திரையரங்குகளை மூடுவது தவிர்க்க இயலாமலே போகும். எங்கள் ஊரில் நான்கு தியேட்டர்கள் உள்ளது. இரண்டில் வேட்டை, இரண்டில் நண்பன். முப்பது நாற்பது பேர் ஒரு காட்சிக்கு வந்தால் ஆச்சர்யம். புதியவர்களின் படங்களுக்கு ஜனங்கள் வருவதே இல்லை. வேறு புதிய படங்கள் வரவில்லையென்றால்... சிரமம் தான். பிரச்சனைகளை பேசி விரைவாக தீர்வு எட்டப்படவில்லை என்றால் - தமிழக திரையரங்குகளை காப்பது கடினம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருக்கிறார்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும். ஆனால் இங்கே என்னடா என்றால், ரெண்டு பேருக்கும் புட்டுக்கிச்சு என்று ...மேலும் வாசிக்க

காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருக்கிறார்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும்.

ஆனால் இங்கே என்னடா என்றால், ரெண்டு பேருக்கும் புட்டுக்கிச்சு என்று கிசுகிசு பரப்புகிறார்கள். அதுவே செய்தியாகவும் கசிவதால் அதையெல்லாம் படித்துவிட்டு, இந்த பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று நமுட்டு சிரிப்பு சிரிக்கிறதாம் ஜோடி.

நயன்தாரா மீண்டும் நடிக்கப் போகிறார் என்று வெளிவரும் செய்திகளிலும் அவ்வளவு உண்மை இல்லையாம். அவரை தேடிச் சென்று அழைக்கிற சில இயக்குநர்களிடம், யோசிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். நேரில் வருகிறவர்களிடம் முகத்தில் அடித்த மாதிரி பதில் சொல்ல முடியாதல்லவா? அதனால்தான் இப்படி ஒரு பதில்.

எப்படி இருக்கிறது இப்போதைய நிலவரம்? பிரபுதேவா இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் ரவுடி ரத்தோர் படப்பிடிப்பு பதாமியில் நடந்து வருகிறது. அவ்வப்போது கிளம்பி பதாமிக்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா.

சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கு திரும்பிவிடுகிறார். இந்த சந்திப்பும் மிக மிக சுமூகமாகவே இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, இவர்கள் இருவருமே சென்னையின் காஸ்ட்லி பகுதியான போர்ட் கிளப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும் தகவல்.

உண்மை இப்படியிருக்கும் போது எதற்காக திரும்ப திரும்ப இவர்களின் காதலை டெட்டால் ஊற்றி கழுவிக் கொண்டேயிருக்கிறது மீடியா என்பதுதான் புரியவே இல்லை! சும்மா கௌப்பிவிட்டது சில நேரத்துல உண்மையானது மாதிரி என்னமாச்சும் நடந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல....

உங்கள் கருத்து ஊட்டலுக்கு நன்றி நண்பரே. காத்திருங்கள் ஒப்புதலுக்கு பின் பிரசுரிப்பேன்...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சமீபத்தில் பாவி என்னும் தலைப்பில் கில்மா படம் ஒன்று வெளியானது. ஆங்காங்கே ஒன்றிரண்டு தியேட்டர்களில் மட்டுமே இந்த படம் ரிலீஸ் ஆகியிருந்தது. ரிலீஸ் ஆன ...மேலும் வாசிக்க

சமீபத்தில் பாவி என்னும் தலைப்பில் கில்மா படம் ஒன்று வெளியானது. ஆங்காங்கே ஒன்றிரண்டு தியேட்டர்களில் மட்டுமே இந்த படம் ரிலீஸ் ஆகியிருந்தது. ரிலீஸ் ஆன இடங்களில் எல்லாம் நல்ல வசூலை வாரிக் குவித்திருந்தது இந்த படம். இந்த படத்தில் நான்கைந்து நடிகைகள் நடித்திருந்தார்கள். இதில் ஒரு நடிகை மட்டும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். மற்ற நடிகைகள் எல்லாம் சுமார் ரகம்தான்.

பாவி படத்தில் இந்த அழகான நடிகை நன்றாகவே தன் திறமையைக் காட்டியிருந்தார். இந்த படத்தைப் பார்த்த மீடியாவில் பணியாற்றும் நபர் ஒருவர் தன் நண்பரான முன்னணி இயக்குநருக்கு போனைப் போட்டு, ‘பாவி படத்தில் அந்த பொண்ணு நடிப்பைப் பாரு... சும்மா பிச்சு உதறியிருக்கு... ஏன் இந்த பொண்ணு இப்படி ஒரு கிளாமர் படத்தில் நடிச்சுது? கூப்பிட்டு உன் படத்தில ஒரு நல்ல கேரக்டர் கொடுப்பா...’ என்று சொல்லியிருக்கிறார்.


உடனே தன் உதவியாளர்களிடம் சொல்லி பாவி படத்தின் டிவிடி கிடைக்குமா என்று அலசி வரச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். டிவிடி கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி வந்திருக்கிறார்கள் இயக்குரின் உதவியாளர்கள். அந்த படத்தின் டிரைலர் மற்றும் ஸ்டில்ஸ்களையாவது பார்க்கலாம் என்று கூகிளில் தேடி ஒரு வழியாக நடிகையின் படத்தைப் பார்த்திருக்கிறார்.

பார்த்ததுமே தனது அடுத்த படத்தில் நடிகையை பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்த இயக்குநர் தன் உதவியாளர்களிடம் அந்த நடிகையிடம் தனது அடுத்த படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்க சொல்லியிருக்கிறார். உதவியாளர்களோ உடனே பாவி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு போன் பண்ணியிருக்கிறார்கள். விஷயத்தை அவர்களிடம் சொன்ன போது தொடர்பு எண்ணை தர மறுத்துவிட்டார்களாம் அவர்கள்.

பின்பு, ‘எங்களிடம் அவங்க எண் இல்லை... அவங்க போன் நம்பரை மாற்றிவிட்டார்கள்...’ என்று மாற்றி மாற்றி சொல்லியிருக்கிறார்கள். வெறுத்துப் போன உதவி இயக்குநர்களோ, ‘சரி... அந்த நடிகை உங்களைத் தொடர்பு கொண்டால், உடனே எங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்...’ என்று சொல்லி இயக்குநரின் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அன்றிலிருந்து சுமார் ஒரு மாதமாக அந்த நடிகையை தேடிக் கொண்டுதான் இருக்கிறார் அந்த முன்னணி இயக்குநர்.

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சுன்னு சொல்வாங்களே... அது இதுதானோ...!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நடிகை தமன்னா தற்போது ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். எப்பப் பார்த்தாலும் ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம்.ஒரு காலத்தில் தமன்னாவுக்கு தமிழில் ...மேலும் வாசிக்க
நடிகை தமன்னா தற்போது ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். எப்பப் பார்த்தாலும் ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம்.ஒரு காலத்தில் தமன்னாவுக்கு தமிழில் அத்தனை மவுசு இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த வேங்கைக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அம்மணி தெலுங்கில் பிசியாகத் தான்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று பாலிமர் தொலைக்காட்சியில் ‘ சிவந்த மண் ...மேலும் வாசிக்க

குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று பாலிமர் தொலைக்காட்சியில் ‘சிவந்த மண்படத்தை ஒளிபரப்பினார்கள். ஜெயா-வில் புளித்துப்போகுமளவுக்குப் பலமுறை ஒளிபரப்பிவிட்டிருந்தபோதிலும், இன்னும் இந்தப் படத்தில் கவனிக்க வேண்டிய சில சுவாரசியமான காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஸ்ரீதரின் ‘சித்ராலயாதயாரிப்பான இந்தப் படம் சற்றே பலவருடங்கள் பின்னோக்கிச் சென்று, நாகர்கோவில் பயனீர் பிக்சர் பேலஸில் இப்படத்தை முதல்முறையாகப் பார்த்த அரை டிரவுசர் நாட்களை அசைபோட வைத்தது. கூட்டமிகுதியால், டிக்கெட் வாங்கி உள்ளே நுழைவதற்குள்ளாகவே படம் ஆரம்பித்து, எம்.என். நம்பியார் புரட்சியாளர்களை மலையில் ஓடவிட்டுச் சுட்டுக்கொண்டிருந்தார். சிவாஜி படம் என்பது தவிரவும், இந்தப் படத்தைப் பார்க்க நாங்களெல்லாம் விழுந்தடித்துப் போனதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. “படத்துலே ஃபாரினெல்லாம் காமிக்கிறாங்களாண்டா!

கருப்பு-வெள்ளையில் அப்போதைய மெட்ராஸைக் காட்டும்போதே, தொன்றுதொட்டு காட்டப்பட்ட எல்.ஐ.சி.கட்டிடத்தையும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனையுமே சற்றும் அலுக்காமல் வாய்பிளந்து பார்த்த எங்களுக்கு, “ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில், அழகிய ரைன் நதியோரத்தில், மாலைப்பொழுதின் சாரத்தில் மயங்கித்திரிவோம் பறவைகள் போல்,என்பதெல்லாம் கற்பனைக்கெட்டாத சங்கதிகள்! "லாஜிக்" என்ற வார்த்தைக்கெல்லாம் எந்த லிப்கோ அகராதியிலும் அர்த்தம்தேடி மெனக்கிடாமல் இருந்ததால், ஒரு விமானத்தின் கண்ணாடியை உருளைக்கிழங்கு சிப்ஸ்போல உடைத்து, அது பசிபிக் பெருங்கடலில் தலைகுப்புற விழுகிற காட்சியையெல்லாம் பிரமிப்போடு பார்த்தோம். ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை,பாடலின் போதெல்லாம், எங்கள் வாய்க்குள் புகுந்து மோட்சமடைந்த ஈக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா! புரட்சிக்காரர்களை ஹெலிகாப்டரிலிருந்து துரத்தித் துரத்திச் சுடுகிற காட்சியில், பதைபதைத்தபடி பார்த்ததும் ஞாபகம் இருக்கிறது. (அந்தக் காட்சியின்போது சிவாஜிக்கு விபத்து ஏற்பட்டதாகவெல்லாம் செய்திகள் வெளியாகின.) அதே போல ஆயுதங்களுடன் வருகிற கப்பலுக்குள் புகுந்து, கிட்டத்தட்ட குக்காபுரா கிரிக்கெட் பந்துகள் போலிருக்கும் வெடிகுண்டுகளை வைத்துச் சிதறடிக்கிற காட்சியிலும் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தோம். (அந்தக் காட்சியில் இடையிடையே 'கிளப்-டான்ஸ்' என்ற பேரில் ஒரு பெண்மணி அரைகுறை உடையில் தனது உடமைகளை வெளிப்படுத்தியதை நாங்கள் ரசிக்கவில்லை என்றால் யார் நம்பப்போகிறார்கள்?)

‘சிவந்த மண்படத்துக்கு முதலில் ‘அன்று சிந்திய ரத்தம்,என்றுதான் பெயரிட்டிருந்தார்களாம். மலையில் நின்றுகொண்டு சிவாஜி பேசுகிற வசனத்தில் ‘அன்று சிந்திய ரத்தம்,என்ற சொற்றொடர் நிறைய வரும். பின்னாளில் ‘அன்று சிந்திய ரத்தம்,என்ற பெயரில் ஜெய்சங்கர்-பத்மப்ரியா (பழைய) நடிப்பில் ஒரு படம் வந்தது. பத்மப்ரியா பிகினியில் வந்த பாவத்துக்காக அதை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.

சிவந்த மண் / அன்று சிந்திய ரத்தம் படத்தில் முதலில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கத்தான் ஆலோசித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நடித்திருந்தால், இறுதிக்காட்சியில் ஒரு அட்டகாசமான கத்திச்சண்டை இருந்திருக்கலாம். சிவாஜி என்பதால், ஒரு பலூனில் சண்டைபோடுவதுபோல நிறைய back-projection பிரயோகத்துடன் எடுத்திருந்தார்கள்.

இன்றைய அகராதிப்படி, அன்றைய ‘சிவந்த மண்,படத்தைப் பக்கா மசாலாப் படமென்று சூடனை அமுத்திச் சத்தியம் பண்ணிவிடலாம் என்றாலும், அந்தப் படத்திலும் கொஞ்சம் ரசிக்கத்தக்க தருணங்கள் இல்லாமல் போய்விடவில்லை. முத்துராமன் கொல்லப்பட்டு, அவரது பிணத்தை சிவாஜி வீட்டுக்குச் சுமந்துவந்து, அம்மா பிணமான மகனின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு சாய்ந்துவிழுந்து இறப்பது இக்காட்சியில் ஒரு வசனம் கூடக் கிடையாது. அதேபோல கதாநாயகன் இறந்துவிட்டான் என்று பெற்றோர் ஈமக்கடன் செய்துகொண்டிருக்க, அவன் வந்து நிற்கும்போது எஸ்.வி.ரங்காராவ் (என்ன ஒரு நடிகரையா! சான்சே இல்லை!) மற்றும் சாந்தகுமாரியின் நடிப்பு! சிவாஜியை ரங்காராவ் கைதுசெய்கிற காட்சி, ஜெயிலில் சிவாஜியை அடித்துவிட்டு ரங்காராவ் தப்பிக்கிற காட்சி என்று படத்தில் இது ஸ்ரீதர் படம் என்று சொல்லத்தக்க சில கட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் விட படம் முழுக்க ஆக்கிரமித்த நம்பியாரின் வில்லத்தனம்! காஞ்சனாவின் குளுகுளு!! நாகேஷின் ஸ்லாப்ஸ்டிக் காமெடி! எம்.எஸ்.வியின் கடுமையான உழைப்பு என்று இந்தப்படத்தில் நிறைய ப்ளஸ்-பாயிண்டுகள் இருந்தன.

சிவந்த மண் படத்தைப் பற்றி அப்போது மிகுந்த எதிர்பார்ப்புகள் ஏற்படுவதற்கு இன்னொரு காரணம் வெளிநாட்டுப் பயணம் குறித்து சிவாஜி எழுதிய ‘அன்னிய மண்ணில் சிவந்த மண்,‘ என்ற கட்டுரைத்தொடர்! ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியான அந்தக் கட்டுரையைக் கிழித்து பைண்ட் பண்ணி வைத்திருந்தது எல்லாம் பழைய கதை!

இதே ‘சிவந்த மண்,’ ‘தர்த்திஎன்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது, தமிழில் முத்துராமன் ஏற்ற பாத்திரத்தில் சாட்சாத் சிவாஜியே நடித்திருந்தார். கதாநாயகனாக நடித்தவர் ஜூப்ளி குமார் என்ற ராஜேந்திர குமார்! கதாநாயகியாக எனது ஆல்டைம் ஃபேவரிட் வஹீதா ரஹ்மான்! ஒரு முறை தூர்தர்ஷனில் இப்படம் திரையிடப்பட்டபோது, சிவாஜியை வில்லன் சுட்டதும் சேனலை மாற்றிவிட்டேன். ராஜேந்திர குமார் என்றால் அடியேனுக்கு அவ்வளவு அபிமானம்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த பூமில புவி ஈர்ப்பு சக்தி இருக்கா? இல்லையா?ங்கற சந்தேகத்தை எனக்கு சின்ன வயசுல இருந்தே சீனப்படங்கள் ஊட்டி, கொடைக்கானல் வருகின்றன ,அதிலும் இந்த ஜெட்லீ படங்கள் ...மேலும் வாசிக்க
இந்த பூமில புவி ஈர்ப்பு சக்தி இருக்கா? இல்லையா?ங்கற சந்தேகத்தை எனக்கு சின்ன வயசுல இருந்தே சீனப்படங்கள் ஊட்டி, கொடைக்கானல் வருகின்றன ,அதிலும் இந்த ஜெட்லீ படங்கள் அம்மம்மா, அப்பப்பா ... செம தமாஷ் போங்க.. பறந்து பறந்து அடிக்கறதுல அண்ணன் கிங்க்கு.. அவர் ஆக்‌ஷன் ஹீரோவா பல படத்துல பார்த்து இதுல துறவியா பார்க்க வித்தியாசம்..  சீனர்களில் ஒரு குரூப் ஒரு கானகத்துல மருந்துக்கான மூலிகைகள் தேடி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பாரதிராஜா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “அன்னக்கொடியும் கொடிவீரனும்”. பாரதிராஜாவின் கிராமிய பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ...மேலும் வாசிக்க

பாரதிராஜா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “அன்னக்கொடியும் கொடிவீரனும்”. பாரதிராஜாவின் கிராமிய பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்கிறார். ஹீரோயின்களாக இனியா மற்றும் கார்த்திகா நடிக்கின்றனர்.படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்த நேரத்தில், கேரளாவுடன் ஏற்பட்ட முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கேரள நடிகைகளான கார்த்திகாவும், இனியாவும் பாரதிராஜாவால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். “கேரளாவுடனான பிரச்சினை தீர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டார் பாரதிராஜா.

அதன் பின் ஹீரோயின்கள் இல்லாத காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு துவங்கப்பட்ட பின், சில பிரச்சினைகளால் பாரதிராஜாவிற்கும், அமீருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து அமீர் நீக்கப்பட்டதாகவும், இயக்குனர் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறொரு ஹீரோவை தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அமீர் நடிப்பதற்கு முன் நடிகர் பார்த்திபன் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் பார்த்திபன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். பாரதிராஜா படத்தில் நடித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நடிப்பதற்கு முன்பே எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துவிட்டது என்று குமுறினார் பார்த்திபன்.

அந்த சமயம் அமீருக்கும், பாரதிராஜாவுக்கும் முட்டலும் மோதலுமாக இருந்தது வந்த நிலையில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் நடிக்கிறார் என அறிவித்தார் பாரதிராஜா. அப்பனுக்கும் மகனுக்கும் நடந்த சண்டைதான், எனக்கும் அமீருக்கும் நடந்தது. நாங்கள் சேர்ந்து பணியாற்றுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றார் பாரதிராஜா.

இப்பொழுது மீண்டும் அமீர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தி திரைஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


அமராவதி என்னும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சங்கவி. அதன்பிறகு விஜய்யின் ...மேலும் வாசிக்க

அமராவதி என்னும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சங்கவி. அதன்பிறகு விஜய்யின் ஆஸ்தான நாயகியாக திகழ்ந்தார் சங்கவி. சங்கவியும் விஜய்யும் இணைந்து ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற சில படங்களில் நடித்தனர். இந்த படங்களில் சில காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டன. ஒரு காலகட்டத்தில் முன்னணி நாயகியாக திகழ்ந்த சங்கவி பின்பு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல ஒதுங்கினார். இப்போது சங்கவிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மருத்துவரை திருமணம் செய்ய உள்ளார் சங்கவி. இவர்களது திருமணம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மகாராஷ்டிராவில் நடைபெறும் அம்பேத்கர் நினைவு நாள் விழாவுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து கும்பல் கும்பலாக வரும் தலித் மக்கள் கூட்டம் ...மேலும் வாசிக்க
மகாராஷ்டிராவில் நடைபெறும் அம்பேத்கர் நினைவு நாள் விழாவுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து கும்பல் கும்பலாக வரும் தலித் மக்கள் கூட்டம் அங்குள்ள நடுத்தர, உயர் வர்க்கத்தினருக்கு அச்சத்தையும் அறுவருப்பையும் ஊட்டுகிறது. 'அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்களிடம் இருந்து எப்போதும் துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையே pollute செய்கிறார்கள். ஒவ்வொருமுறையும் இப்படி கூட்டம் கூட்டமாக இங்கே வருவதை நிறுத்தவேண்டும். தானே போன்ற புறநகர் பகுதிகளுக்கு அவர்களை அனுப்பிவைத்துவிடலாம்.'

'அவர்க்ள் அசுத்தமானவர்கள் என்கிறீர்கள். ஆனால் அவர்கள்தானே உங்கள் குப்பைகளையும் அழுக்குகளையும் சுத்தப்படுத்துகிறார்கள். அவர்களை ஏன் வெளியேறச் சொல்கிறீர்கள்?'

'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'

வேறு நபர். இன்னொரு கேள்வி. 'ரிஸர்வேஷனை நிறுத்திவிடவேண்டும் என்று சொல்கிறீர்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் எப்போதோ முன்னேறிவிட்டார்கள், இப்போது கஷ்டப்படுபவர்கள் நாம்தான் என்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் அப்படி முன்னேறிய நபர் ஒருவரைப் பற்றி சொல்லுங்கள்.'

'நான் அவர்களுடன் பழகுவதில்லை. எனக்கு யாரையும் தெரியாது.'

அவர்கள் ஏன் அசுத்தமாக இருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் ஒதுக்குப்புறத்திலும் குப்பைமேட்டிலும் சாக்கடை ஓடும் சேரிகளிலும் குடியேறியிருககிறார்கள். ஏன் அங்கிருக்கிறார்கள்? அவர்கள் ஏழைகள். ஏன் அப்படி? வேலையில்லை. ஏன் இல்லை? படிக்கவில்லை. ஏன் படிக்கவில்லை? வசதியில்லை. இன்னும் கேள்விகள் அடுக்கினால் முகத்தில் அடிப்பது போல் இப்படி பதில் வரும். 'விதி!'

12ம் வகுப்பு வரை படித்த ஒருவரும் குப்பை அள்ளும் தொழிலில்தான் இருக்கிறார். சேறும் சகுதியும் ஊறிப்போயிருக்கும் அந்த மைதானத்தில் வரிசையாக குப்பை லாரிகள் வந்துகொண்டிருக்கின்றன. நிறுத்திவிட்டு ஒரு காலை வண்டி மேல் வைத்து, பின்பக்கக் கதவை பிடித்து இழுக்கும்போதே கழிவுகள் மார்பிலும் தொடையிலும் சரியத் தொடங்குகின்றன. நீண்ட கம்பி கொண்டு கிளறுகிறார்கள். சில இடங்களில் கெட்டித்துப்போயிருக்கிறது. சில இடங்களில் கருஞ்சாக்கடைக் கட்டிகளாகத் திரண்டிருககிறது.

அவர் காலில் செருப்பில்லை. தலையில் ஒரு துண்டு சுற்றியிருக்கிறார். ட்ரவுசரை முட்டி வரை கிழித்துவிட்டிருக்கிறார். மேலுக்கு வண்ணமிழந்த டீஷர்ட். லாரியில் இருந்து குப்பை மலையை கீழே தள்ளுவதே பெரும் பாடு. அது ஆன பிறகு, தரையில் சிதறியதை வகைப்படுத்தி பிரித்து அள்ளி எடுத்துச் சென்று வேறோரிடத்தில் குவிக்கவேண்டும்.

'எடுத்து தலைமீது வைத்து நடக்கும்போது பல சமயங்களில் உடைந்து தலையிலும் முதுகிலும் தொடை, கால் என்று உடல் முழுவதும் கழிவுகள் சிதறியோடும்.' ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலைப்பாகையும் கையுறையும் தரவேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் தராத பட்சத்தில் அரசு இவற்றை அளிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருககிறது. 'ஆனால் இன்றுவரை எங்களுக்கு இந்த அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை. தங்களுக்குச் சாதகமாக சட்டப்படி உத்தரவு வாங்குவதற்காக வக்கீலை வைத்து வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள். அந்த வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் தருகிறார்கள்.'

பணி நிரந்தரம் கிடையாது. அன்றாடம் கிடைக்கும் கூலி மட்டுமே. பணியில் நேரும் விபத்துக்கு இழப்பீடு கிடையாது என்பது மட்டுமல்ல விடுமுறையின் போது சம்பளமும் கிடையாது. 'ஒருமுறை கம்பியைக் கொண்டு லாரியில் உள்ள குப்பையைக் கிளறும்போது சட்டென்று பறந்து வந்த ஒரு கிளாஸ் துண்டு கண்ணைக் கீறியெடுத்துவிட்டது.' இடுங்கிய கண் கொண்டு காமிராவைப் பார்க்கிறார் ஒரு தொழிலாளி.

அம்பேத்கர் நினைவுவிழா கொண்டாட்டங்களில் இவர்களும் பங்கேற்கிறார்கள். அன்றைய தினம் மட்டும் புத்தாடை அணிந்து, இனிப்பு வாங்கி உண்டு,  பாடல்கள் இசைத்துக்கொண்டு, ஆட்டம் போட்டுக்கொண்டு குழந்தைகளையும் கட்டு சாப்பட்டையும் சுமந்துகொண்டு, மனைவி உறவினர் நண்பர்களுடன் இவர்கள் ஊர்வலமாக நடந்துசெல்கிறார்கள். பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் பிதுங்கி வழிகின்றன. ஜெய் பீம் முழக்கங்கள் திரும்பும் திசையெங்கும் எதிரொலிக்கின்றன. 

ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் இவர்களில் ஒருவரும் அடக்கம். 

'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் திடீர் திடீர் என காணாமல் போகிறார்கள். கடத்தப்படும் பேராசிரியர்கள் வாயில் வயர்கள் சொருகிய நிலையில் ...மேலும் வாசிக்க
தமிழகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் திடீர் திடீர் என காணாமல் போகிறார்கள். கடத்தப்படும் பேராசிரியர்கள் வாயில் வயர்கள் சொருகிய நிலையில் அந்தந்த கல்லூரிகளின் வாசலிலேயே பிணங்களாக தொங்கவிடப்படுகிறார்கள். அவர்களின் அருகில் "நண்பன்" என ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. பேராசியர்கள் அனைவரும் பீதி ஆகி கல்லூரிக்கே வர மறுக்கிறார்கள். கல்வித்துறையே ஸ்தம்பிக்கிறது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நடிகர் விஜய் நடித்த "நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ...மேலும் வாசிக்க
நடிகர் விஜய் நடித்த "நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர், இயக்குனர் ஷங்கர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு அக்கூட்டமைப்பின் தலைவர் சேம நாராயணன் அனுப்பியுள்ள கடிதம்:

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நடிகர்களில் ஒழுக்கமானவர்களே கிடையாது... என்று மீண்டுமொரு முறை புலம்பி தீர்த்து இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அப்படியே அரசியல்வாதிகளின் ஒழுக்கம் (ஊழல், வன்முறை) மற்றும் ...மேலும் வாசிக்க
நடிகர்களில் ஒழுக்கமானவர்களே கிடையாது... என்று மீண்டுமொரு முறை புலம்பி தீர்த்து இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அப்படியே அரசியல்வாதிகளின் ஒழுக்கம் (ஊழல், வன்முறை) மற்றும் மருத்துவர்களின் ஒழுக்கம் (​பேராசை) போன்றவற்றையும் கூறி இருக்கலாம். சேம் சைடு கோல் போட முடியாதே. ராமதாஸின் தம்பியையே சி.பி.ஐ கைது செய்துள்ளது - கொலை வழக்கில். அடுத்தவர்களின் ஒழுக்கம் பற்றி பேசுபவர்கள் - வன்முறை இல்லா ஆரோக்கியமான அரசியலுக்கு ஆரம்பமாக இருக்க வேண்டாமா.

பிறரை "புறம் பேசுவதும் மோசமான வியாதியே" என்பது மருத்துவர் அய்யாவுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே. சினிமா கலைஞர்களை பழித்து பேசுவதில் - இரண்டு விதமான அனுகூலங்கள் உள்ளன. ஒன்று, மீசையை முறுக்கி கொண்டு, "ஏன் எங்களை பழிக்கிறாய்" என்று சாதி கட்சியை போல எவரும் வன்முறையை கையில் எடுக்க போவதில்லை. இரண்டு செய்திகளில் அடிபட்டு கொண்டே இருக்கலாம். பிரபலமடைய ஒரு கேவலமான உத்தி இது என்று சொல்லலாம். இந்த இரண்டை தான் விரும்புகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

நமக்குள்ள ஒரே ஆச்சரியம். "எப்படி சலிப்பில்லாமல் மேடைக்கு மேடை இதையே பேசி கொண்டிருக்க முடிகிறது" என்று. தமிழக கட்சிகள் ஒவ்வொன்றும் - சில விஷயங்கள் குறித்து பேசி பொழுதை ஒப்பேத்துவதற்காக காப்புரிமை பெற்றுள்ளதோ என்றொரு சந்தேகம் வெகு நாளாகவே உள்ளது. கம்யூனிஸ்ட்களுக்கு - முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என்பன. திராவிட க(ட்சி)ழகங்களுக்கு பார்ப்பனியம், மாநில சுயாட்சி என்பன... அந்த வரிசையில் பா.ம.க பெற்றுள்ள காப்புரிமை - திராவிடத்தையும், சினிமா நடிகர்களையும் பழித்தல்.

சமீபத்திய அன்புமணி ராம்தாஸின் பழித்தல் பேச்சை பார்ப்போமா? "திராவிட கட்சிகளுடன், 15 ஆண்டுகளாக நாம் கூட்டணி வைத்தது தவறு. இதை ஒப்புக்கொள்கிறேன். அத்தவறு இனி நடக்காது. உள்ளாட்சி தேர்தலில் சுயமரியாதையாக போட்டியிட்டு வெற்றி பெற்றோம். நமது வெற்றியை பத்திரிகையாளர்கள் அங்கீகரிக்கவில்லை. நம்மை கண்டு திராவிட கட்சிகள் பயப்படுகின்றன. இதுதான் நமக்கு முதல் வெற்றி. தமிழக அரசு 1.19 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது.

எங்களிடம் ஆட்சியை கொடுங்கள். ஓராண்டில் அடைத்து காட்டுகிறோம். நமக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கும் தகுதி கிடையாது. வரும் லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளிலும் பா.ம.க., போட்டியிடும்.
நாம் சினிமாவுக்கு எதிரானவர்கள் அல்ல. நானும், நிறுவனர் ராமதாசும் படம் பார்ப்போம். அது பொழுதுபோக்கு. சினிமாவில் நடித்தவர்கள் அரசியலுக்கு வர விரும்புகின்றனர். குழந்தைக்கு பால் கிடைக்காத நிலையில், நடிகனின் "கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். பீர் அபிஷேகம்கூட செய்கின்றனர்.

சினிமாவில் உண்மையான, ஒழுக்கமானவர்கள் ஒருத்தர்கூட இல்லை. நோஞ்சான் மாதிரி இருப்பவன், "ப்பூ' என ஊதினா பறந்து போகிறவன் எல்லாம், 10 பேரை சுற்றி சுற்றி அடிக்கிறான்.ஸ்பிரேயை அடித்து வியர்வை சிந்தி உழைப்பவன் போல் காட்டுகிறான். இவர்கள் அடுத்த முதல்வராக வர ஆசைபடுகின்றனர். இது தமிழ்நாட்டின் தலையெழுத்து" என்று பேசி இருக்கிறார்.

"திராவிட கட்சிகளுடன், 15 ஆண்டுகளாக நாம் கூட்டணி வைத்தது தவறு. இதை ஒப்புக்கொள்கிறேன். அத்தவறு இனி நடக்காது." என்கிறார். என்னவோ மக்கள் "திராவிட கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி" வைத்ததற்கு ரெம்ப வருத்தப்பட்டது போல பேசுகிறார். கூட்டணி வைத்து மந்திரி பதவி பெற்றது நீங்கள். கூட்டணி அறுந்ததால் மந்திரி பதவியை இழந்ததும் நீங்கள். உங்கள் கூட்டணியால் மக்கள் ஒன்றும் சம்பாதிக்கவில்லையே. மக்களுக்கு இது தான் கவலையா

ஜெயிக்கிற கூட்டணியில் எது நின்றாலும் - மக்கள் அதற்கு ஒட்டு போடுவார்கள். அது பா.ம.க.,வா, தே.மு.தி.க.,வா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அப்படி பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணகர்த்தவார ஆக முடியுமா? ஊராட்சி மன்ற தேர்தலில் பா.ம.க வெற்றியை பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையாம். "ஜஸ்ட் பாஸ்" கூட வாங்கவில்லை. அதை வெற்றி என்று எப்படி நடுநிலையாளர்களால் சொல்ல முடியும். "நாங்கள் சினிமாவுக்கு எதிரி இல்லை" என்று ராமதாசும், இவரும் வீட்டில் சினிமா பார்ப்பார்களாம். நாம் கூட அரசியலுக்கு எதிரி இல்லை. சாதி கட்சியின் வன்முறை அரசியலுக்கு தான் எதிரி.

அன்புமணிராம்தாஸ் சொன்ன மாதிரியே கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்பதை நாமும் வெறுக்கிறோம். பாலாபிஷேகம் என்கிற கேவலத்தை எவன் துவக்கிவைத்தான் என்று தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் வன்முறை ரத்த அபிஷேகத்திற்கு முன், பாலாபிஷேகத்தை கண்டித்து மன்னிக்கலாம். நோஞ்சான் மாதிரி என்கிறார் அன்புமணி. மருத்துவர் நோஞ்சான் என்கிற வார்த்தையை உபயோகிக்கலாமா? ஒருவன் பத்து பேரை அடிக்கிறானாம். பத்து பேரின் சொத்தை அபகரிக்கிற ஒரு அரசியல்வியாதியை விடவா இது மோசம்.

இளைய தலைமுறை வளரும் தலைவர்கள் - தமிழருவி மணியன் அவர்களின் பேச்சை கேட்பது நல்லது. யாரையும் பழிக்காமல், அதே நேரம் சம்பந்தப்பட்டவர் மீது சாட்டப்படும் குற்றத்தை அழகாக, அதே நேரம் ஆணித்தரமாக பதிவு செய்வதில் வல்லவர். அம்மாதிரியான பேச்சு நாகரீகத்தை கை கொள்வது நல்லது. திராவிட தலைகள், திட்டி திட்டியே வளர்ந்தது போல தாங்களும் வளர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். அந்த காலம் வேறு. இந்த காலம் வேறு.

நிச்சயம் இன்றைக்கு தமிழகத்தில் கடுமையான பிரச்சனைகள் பல இருக்கின்றன. ஆனால் அது குறித்து பேசவோ, போராடவோ அச்சப்பட்டு கொண்டு - அரசியல் கூட்டத்தில் தாங்கள் தொலைந்து போகாமல் இருக்க - திராவிடத்தையும், சினிமாவையும் பழிக்கின்றனர். கூட்டத்திற்கு கூட்டம் இதையே பேசி கொண்டு இருந்தால் - தொண்டர்கள்(!) துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி விட மாட்டார்கள். ராம்தாஸ் கூட்டத்தில் அது தானே நடந்தது.

கட்சி ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, ராம்தாஸ் பேசி கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவராக எழுந்து போக, கோபமுற்ற ராமதாஸ் - மேற்கொண்டு தொண்டர்கள் ஓடி போகாமல் இருக்க, வாசல் கேட்டை இழுத்து மூடிவிட்டு பேசினாராம். இனியும் பிறரை பழிக்காமல் - தங்களை சுயபரிசோதனை செய்தால் கட்சி பிழைக்கும். இல்லை எனில், இரண்டு மருத்துவர்கள் இருந்தும் கட்சியை காப்பாற்ற இயலாமல் போகும்.



கார்ட்டூன் : தினமலர்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பாரதிராஜாவின் கனவுப்படம்தான் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்தப் படத்திற்கு பிரமாண்டமான முறையில் தனது ...மேலும் வாசிக்க



பாரதிராஜாவின் கனவுப்படம்தான் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்தப் படத்திற்கு பிரமாண்டமான முறையில் தனது சொந்த ஊரிலேயே பட பூஜையும் நடத்தினார் பாரதிராஜா. அமீர் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இனியாவும், கார்த்திகாவும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பு துவங்கி நடந்து வந்த நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை பூதாகரமாக வெடிக்க படப்பிடிப்புக்கு கொஞ்ச நாளைக்கு பேக்அப் சொன்னார்கள். இப்போது படப்பிடிப்பை மீண்டும் தொடரலாம் என்றால் மீண்டும் தடைபட்டு நிற்கிறது அன்னக்கொடியும் கொடிவீரனும். இதற்கு காரணம் அமீர் என்கிறார்கள். அமீரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறை காரணமாக வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த பல திரைப்படங்கள் தமிழ்ப்புத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ...மேலும் வாசிக்க

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறை காரணமாக வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த பல திரைப்படங்கள் தமிழ்ப்புத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெரிய நடிகர்களின் படங்கள் இனிமேல் பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியிடப்படும். பொங்கல், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், தீபாவளி ஆகிய நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும். மீதி நாட்களில் சிறு படங்கள் வெளியாகும் என்று அறிவித்தது. ஆகையால் சிறுபடங்களின் தயாரிப்பாளர்கள் பலன் அடைவார்கள் என்று அறிவித்தது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பால் பல்வேறு சிறு தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

பிப்ரவரி 3ம் தேதி தனுஷ் நடித்த ' 3 ' , 17ம் தேதி கார்த்தி நடித்த ' சகுனி ' வெளியாகும் என்று ஏற்கனவே முடிவானது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால் இப்படங்கள் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடித்தது.

தற்போது ' 3 ', ' சகுனி ' ஆகிய படத் தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 13ம் தேதிக்கு தங்களது வெளியீட்டை தள்ளிவைத்து விட்டன. அஜீத் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி வெளியீடு என்று தீர்மானிக்கப்பட்ட ' பில்லா 2 ' தங்களது வெளியீட்டு தேதியை தள்ளிப் போட்டு, மே 1ம் தேதி வெளியிட தீர்மானித்து இருக்கிறது.

மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரூர் மூனா செந்தில்



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சென்ற வார படவரிசை 27/01/2012 1)நண்பன் 2)வேட்டை 3)கொள்ளைக்காரன் 4)மௌனகுரு 5)மேதை 6)போராளி 7)மயக்கம் என்ன 8)மகாராஜா 9)பதினெட்டான் குடி ...மேலும் வாசிக்க
சென்ற வார படவரிசை 27/01/2012
1)நண்பன்
2)வேட்டை
3)கொள்ளைக்காரன்
4)மௌனகுரு
5)மேதை
6)போராளி
7)மயக்கம் என்ன
8)மகாராஜா
9)பதினெட்டான் குடி எல்லை ஆரம்பம்
10)ஒஸ்தி


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)நண்பன்
2)வேட்டை
3)கொள்ளைக்காரன்
4)மேதை
5)விநாயகா
6)மதுவும் மைதிலியும்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சூப்பர் ஸ்டார் ரஜினியின் வலைதளத்தை வளைய வர (பிரவுஸ்) இணைய வசதி தேவை இல்லை ...மேலும் வாசிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வலைதளத்தை வளைய வர (பிரவுஸ்) இணைய வசதி தேவை இல்லை என நான் கூறியபோது, என்ன இது இன்னொரு ரஜினி  ஜோக்கா? என்று தான் அனைவரும் கேட்டார்கள். கொஞ்சம் கூட அது சத்தியமா இல்லையா என்று யாரும் யோசிக்க கூட இல்லை.

ஆனால், அது முற்றிலும் உண்மை. ஆம், ரஜினியின் இணைய தளத்தை வளைய வர இணைய தள வசதி தேவை இல்லை. அது மட்டுமில்லை, இணையத்தில் நீங்கள் இணைத்திருந்தால் வலைதளத்தை வளைய வர முடியாது. இணைய இணைப்பை துண்டித்தால் மட்டும் உங்களால் அவரின் வலைதளத்தை சுற்றி பார்க்க முடியும்.

கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் இந்நேரம் நீங்கள் ஊகித்திருக்கலாம். ஆம், ரஜினியின் வலைதளத்திற்கு செல்ல மட்டும் கண்டிப்பாக உங்களுக்கு இணைய வசதி தேவை. ஆனால், அதன் பிறகு இணையத்திலிருந்து நீங்கள் வெளி வந்தால் தான் உங்களால் மேற் கொண்டு தளத்தை சுற்றி வர முடியும். 

www.allaboutrajini.com என்ற வலைதளத்திற்கு சென்றால் உடனே "It runs on Rajini Power” என்ற வாசகத்துடன், உடனே உங்களை இணைய தளத்திலிருந்து வெளியே வருமாறு அறிவுரை காத்திருக்கும். அதுவரை உங்களால் மற்ற பக்கங்களை சென்று காண முடியாது. இணைய இணைப்பை துண்டித்து விட்டு உள்ளே சென்றால் "story of the legend" , "inside scoops" , "behind-the-scenes action" என்று பல சுவாரசியமான விஷயங்கள் நமக்காக காத்திருக்கின்றன.

இந்த வலைதளத்தை உருவாக்கியுள்ள  வெப்சட்னியின் இயக்குனர் குர்பாக்ஸ் சிங், ரஜினி என்னும் மாபெரும் நடிகருக்காக இதை அர்ப்பணிப்பதாக தெரிவித்து உள்ளார். 

ஆயிரக் கணக்கில்  ஹிட்டுகளை அள்ளி வரும் இந்த தளம் மற்ற சமூக வலை தளங்களிலும் (Facebook, Twitter) அதிக அளவில் பகிரப் பட்டுள்ளது. பின்னணியில் வேலை செய்யும் கடினமான அல்காரிதம் மூலம் இது சாத்தியப்பட்டதாகவும், பல முறை முயன்று கடைசியில் இதற்க்கான பிரோக்ராம்மை எழுதியதாக தெரிவிக்கிறார் சிங். மேலும் இது தான் உலகில் முதன் முதலில் இணைய வசதி இல்லாமல் இயங்கும் முதல் வலை தளம் என்றும் பெருமை கொள்கிறார்.

நீங்களும் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள். அப்புறம் மறந்து விடாதீர்கள். இணையத்தை விட்டு வெளியே வந்தால் தான் நீங்கள் தளத்தை சுற்றி பார்க்க முடியும்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


திரைவிமர்சனம்

3 இசை விமர்சனம்


சின்னப்பயல்



ஆல் இஸ் வெல்
முத்துலெட்சுமி/muthuletchumi











A WHITE SNAKE\'S REVENGE - ஜெட் லீ நடித்த ...
சி.பி.செந்தில்குமார்



50/50 [2011]


ஹாலிவுட்ரசிகன்

நண்பன்


SathyaPriyan